சென்னை, மே 23- தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்க ளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள் ளதால் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சொந்த ஊர்களுக்கும், வெளியூர் சுற்றுலா தலங்களுக்கும் 2 வருடங்களுக்கு பிறகு தற்போது செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். இரண்டு வருடகாலமாக கொரோ னா வைரஸ் பரவல் காரணமாக வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள், இந்த ஆண்டு கோடை விடுமுறையை கழிக்க வெளியூர்களுக்கு பயணம் மேற் கொண்டு வருகின்றனர். அதனால் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய் வோரின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. குறிப்பாக நீண்டதூரம் செல்லக் கூடிய அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் வரை தினமும் 10 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்து அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்தனர். அந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது வார இறுதி நாட்களில் 22 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்து பயணம் செய்கி றார்கள்.
இதுகுறித்து அரசு விரைவு போக்கு வரத்து கழக மேலாண்மை இயக்குநர் இளங்கோவன் கூறியதாவது:- கோடை விடுமுறை காரணமாக அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. முன்பதிவு செய்யும் பயணிகள் எண்ணிகை உயர்ந்துள்ளது. வெளியூர் சுற்றுலா தலங்களுக்கு 2 வருடங்க ளுக்கு பிறகு தற்போது செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். மற்ற நாட்களில் 800 பேருந்துகளுக்கு 18 முதல் 20 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்கின்றனர். குறிப்பாக ஏ.சி. பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். இதனால் குளிர்சாதன வசதி பேருந்துகள் அனைத்தும் நிரம்பி விடுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில் அரசு விரைவு பேருந்துகளுக்கு தனியார் இணைய தளம் வழியாக முன்பதிவு செய்யப்பட்ட வசதி நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் போது 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. அதனால் டிக்கெட் கட்டணம் அதிகமாவதால் அரசு விரைவு போக்குவரத்து கழக இணைய தளம் வழியாக மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. தனியார் போர்ட்டல் மூலம் முன்பதிவு செய்ய இயலாது.