121 ஆண்டுகளில் சென்னை - புதுச்சேரி இடையே புயல் (மாண் டஸ்) கரையை கடப்பது இது 13வது முறையாகும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்தார்.
வெள்ளியன்று சென்னை விமான நிலையத்தில் 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கிழக்கு கடற்கரையை ஒட் டிய முட்டுக்காடு, கோவ ளம் பகுதிகளில் இடை விடாமல் கனமழை வெளுத்து வாங்கியது.
விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடி, பொம் மையார்பாளையம் பகுதி யில் கடல் சீற்றத்தில் சிக்கி 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. புதுச்சேரியிலும் கடல் சீற்றத்தில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமானது (செய்தி :5)
புயல் கரையை கடக்கும் பகுதியான மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை சுற்றுவட்டார பகுதி களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னை, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி புரம் உள்ளிட்ட 6 மாவட்ட ங்களில் வெள்ளியன்று இரவு மட்டும் இரவு நகர பேருந்துகள் ரத்து செய்யப் பட்டன.
புயல் காரணமாக மறு அறி விப்பு வரும் வரை அனை த்து பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங் களை மூட சென்னை மாந கராட்சி உத்தரவிட்டது
முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக சென்னை யில் 5,093 நிவாரண மை யங்களும், 121 தங்கு மிடங்களும் ஏற்படுத்தப் பட்டன. புதுச்சேரியில் 238 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன.
புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகத் தை பொறுத்து மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் முன்கூட்டியே அறி வித்தது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பர்மா காலனியில் பலத்த காற்று காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த கண்ணாடி விழுந்தில் சிலிண்டர் டெலிவரி செய்து கொண்டிருந்த பழனியப்பன் என்பவர் உயிரிழப்பு.
மழையும், பனியும் சேர்ந்து வாட்டியதால் ஊட்டியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். மதிய நேரம் கூட வாக னங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டுச் சென்றது.
மயிலாடுதுறை குத்தா லம் அருகே பெரியேறி பகுதியில் பலத்த காற்றி னால் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த தில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனப் பகுதியான மேற்குக் கரையில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய வெறியாட்டத்தில் நான்கு அப்பாவிகள் பலியாகியுள்ளனர். இந்தப் பகுதிகளில் ஒவ்வொரு நாளும் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் 15 வயது முகமது ரிமாவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதல்களில் மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பிரான்சின் தலைநகர் பாரிசில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது. 45 நிமிடங்கள் ஏற்பட்ட இந்த மின்வெட்டால் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. பாரிசிற்கு அருகில் உள்ள 9 மாவட்டங்களிலும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த மின்வெட்டு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், வரும் மாதங்களில் வரப்போகும் நெருக்கடியையே இது காட்டுகிறது என்று மக்கள் கூறுகின்றனர்.
பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியில் புதிய உறுப்பினராக எகிப்து இணைந்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளால் 2014 ஆம் ஆண்டில் இந்த வங்கி தொடங்கப்பட்டது. ஏற்கனவே இந்த நாடுகள் தங்களுக்குள் அவரவர் நாணயங்களை வைத்து வர்த்தகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளன. அமெரிக்க டாலரை அதிகம் சார்ந்து இல்லாமல் இருக்கவே இந்த ஏற்பாடு நடக்கிறது. இதில் எகிப்தும் இணைந்து கொள்ளவிருக்கிறது.