சென்னை,ஜன.25- அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பொறியியல், மருத்துவம், வேளா ண்மை உள்ளிட்ட அனைத்து தொழில் முறை படிப்புகளிலும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி தமிழ்நாடு அரசு சாதனை படைத்துள் ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நாட்டிலேயே தமிழ்நாட்டை உயர்கல்வி யில் முதன்மை மாநிலமாக உயர்த்தி பல்வேறு சாதனைகளை மாநில அரசு படைத்து வருகிறது. இந்த அரசின் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம் பெண்கள் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை பல ஆய்வுகள் மெய்ப்பித்துள்ளன. அதேபோல் மாணவர்களுக்கான ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை செயல் படுத்தி மாணவர்கள் தங்கள் உயர் கல்வி கனவை எந்த இடையூறு இல்லா தவாறு சாதிக்க சாத்தியப்படுத்தி உள்ளார் முதல்வர். இத்திட்டங்களை போலவே அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை உயர்த்த வேண்டும், உயர்கல்வி சேர்க்கையில் அவர்களுக்கான உரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத் துடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பொறியியல், மருத்துவம், வேளாண் மை உள்ளிட்ட அனைத்து தொழில் முறை படிப்புகளிலும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை மாநில அரசு செயல்படுத்தும் என 20.9.2021 அன்று முதல்வர் அறிவித்தார். அதன்படி, நடைமுறைப்படுத்தியதுடன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்ட ணம், விடுதி மற்றும் போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட மொத்த கல்விச் செலவையும் அரசே ஏற்றுக்கொண்டுள் ளது. கடந்த நான்கு கல்வி ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ் ரூ. 1,165 கோடிக்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40,168 மாணவர்கள் பயனடைந் துள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில்வதால் எத்தகைய இடையூறும் எதிர் கொண்டு விடக் கூடாது எனும் முதல்வரின் அக்கறை உள்ள நடவடிக்கையினால் இந்த சாதனை நிகழ்ந்திருக்கிறது. குறிப்பாக, தொழிற் படிப்புகளில் 35,530 பேர், மருத்துவம் சார்ந்த படிப்புக ளில் 2,382 பேர், வேளாண் படிப்புகளில் 1,369 பேர், கால்நடை மற்றும் மீன்வளம் சார்ந்த படிப்புகளில் 261 பேர், சட்டப் படிப்புகளில் 626 பேர் என மொத்தம் 40,168 அரசுப்பள்ளி மாணவர்கள் கடந்த நான்காண்டுகளில் இந்த இட ஒதுக்கீட்டினால் பயனடைந்துள்ளனர்.