states

வலுவான பொருளாதாரத்தை எட்ட இளம் பெண்களின் பங்களிப்பு அவசியம்

ஐதராபாத், டிச.29- அறிவியல் தொழில்நுட்பம், பொறி யியல், கணிதவியல் ஆகியவை இந்தி யப் பொருளாதாரத்தில் முக்கிய மானவை. தொழில்நுட்பவியலாளராக இளம் பெண்களை உருவாக்குவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை நாடு எட்ட முடியும் என்றார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.  ஐதராபாத்தில் உள்ள ஜி.நாரா யணம்மா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னா லஜி அண்ட் சயின்ஸ் பெண்கள் கல்லூரி யில் உரையாற்றிய குடியரசுத் தலை வர் முர்மு,  தொழில்நுட்பத்தின் பலன் கள் தொலைதூரப் பகுதிகளையும், ஏழை-எளிய மக்களையும் சென்றடை வதுடன், சமூக நீதிக்கான கருவியாக வும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர்,  கணினிகள், மருத்துவ உபகரணங்கள், இணையம், ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் கட்டண முறைகள் உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றங் களில் பொறியியல் பெரும் பங்காற்றி யுள்ளது.  சிந்தனைக்கு எட்டாத, முன் னெப்போதும் கண்டிராத பிரச்சனை களுக்கு விரைவான மற்றும் நிலை யான தீர்வுகள் தேவைப்படும்

இன்றைய உலகில் தொழிலாக பொறியியலின் பங்கு மிகவும் முக்கியமானது.  உலகத்தை சிறந்த இடமாக மாற்றும் ஆற்றல் பொறியியலாளர்களுக்கு  உள் ளது. அவர்கள் கண்டுபிடிக்கும் தீர்வு களும் எதிர்காலத்தில் அவர்கள் உரு வாக்கும் தொழில்நுட்பங்களும் மக்கள் நலனைச் சார்ந்ததாகவும், சுற்றுச்சூழலு க்கு உகந்ததாகவும் இருக்கவேண்டும்.  பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் தில் பெண்களின் பங்களிப்பு குறித்து குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் பெரிய நிறுவனங்களின் தலைவர் களாக பெண்கள் பரிணமித்து வரு கின்றனர். தொலைத் தொடர்பு, தக வல் தொழில்நுட்பம், விமானப் போக்கு வரத்து, இயந்திர வடிவமைப்பு, கட்டு மானப்பணிகள், செயற்கை நுண்ணறிவு உள்பட அனைத்து துறைகளிலும் பெண்கள் பெரிய அளவில் பங்களித்து, பிரகாசித்து வருகின்றனர். அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியமானவை. தொழில்நுட்பவியலாளராக இளம் பெண்களை உருவாக்குவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை நாடு எட்ட முடியும் என்றார்.