சென்னை, செப்.26- கலைஞர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் அக்.14 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்றும் இதில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பெண் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள் என்றும் அக்கட்சியின் மூத்த தலை வர் கனிமொழி தெரிவித்துள்ளார். இந்த மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி, சிபிஐ தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனி ராஜா உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் மகளிர் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்று கிறார்கள். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது திமுகவின் நீண்ட கால கோரிக்கையாகும். அத்தகைய மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒன்றிய பாஜக அரசு நிறைவேறி யுள்ளது. ஆனால் அதுவும், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அமலுக்கு வர முடியாத நிலை யில், 2029ஆம் ஆண்டு வரும் எனத் தெரிவித்துள்ளனர். அது வும் நிச்சயமற்றதாக உள்ளது. எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்து வது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பது காலத்தின் தேவையாக கருதியும் பெண்ணு ரிமைப் போற்றவும் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் அனைத்து மகளிர் சகோதரிக ளும் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கை ஒன்றில் கனி மொழி எம்பி தெரிவித்துள்ளார்.