திருநெல்வேலி, டிச.2- பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் தொழிலதிபர்களைக் குறி வைத்து அமலாக்கத்துறையினர் மிரட்டுகின்ற னர் என சபாநாயகர் அப்பாவு தெரி வித்துள்ளார். இது தொடர்பாக திருநெல்வேலி யில் சனிக்கிழமை செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த அவர் கூறிய தாவது:- சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்பு கள் இடைத்தரகர்கள் மூலம் என்னை மிரட்டின. ஊரை விட்டு எல்லாம் போகச் சொன்னார்கள், செல்போன் நம்பரை மாற்றச் சொன்னார்கள். மூன்று மாத மாக இடைத்தரகர்கள் பலர் என்னிடம் பேசினார்கள். என்னைப்போன்று எல்லோருக்கும் ஒன்றிய அரசின் புல னாய்வு நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டல் விடுக்கின்றன. பண பேரம் பேசி படியவில்லை என் றால் நோட்டீஸ் அனுப்பி அமலாக்கத் துறை எச்சரிக்கிறது. நான் சரியாக இருக்கிறேன் என்ன வந்தாலும் மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார் என்றேன் என்றார். இதற்கிடையில் விழுப்புரத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச் சர் சி.வி.சண்முகம், “மெச்சூரிட்டி இல்லாத ஒரே தலைவர் அண்ணா மலை” தான் என்றார்.