சிவசேனா சட்டமன்ற கட்சித்தலைவர் அஜய் சவுத்ரி
பாஜக-வுக்கு ஆதரவாக சாய்ந்ததை அடுத்து, மகாராஷ்டிர நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே-வை, சட்டமன்றக்குழுத் தலைவர் பதவியிலிருந்து சிவசேனா கட்சி நீக்கியது. ஆனால், சிவசேனா சட்டமன்றக் குழுத் தலைவராக ஷிண்டே நீடிப்பதாக 37 எம்எல்ஏ- க்கள் கையெழுத்திட்டு ஆளுநருக்கு கடிதம் அனுப்பினர். இதனிடையே, சிவசேனா சட்டமன்றக் குழுத் தலைவராக அஜய் சவுத்ரியை அங்கீகரித்து அதற்கான ஒப்புதலை மகாராஷ்டிர சட்டமன்ற துணை சபாநாயகர் வழங்கியுள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான எம்எல்ஏ-க்களின் கோரிக் கையை ஏற்று துணை சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
எம்விஏ செல்வாக்கை பாஜக-வால் சகிக்க முடியவில்லை
மகா விகாஸ் அகாதி (MVA) கூட்டணி உருவான நாளில் இருந்து, மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற நாளில் இருந்து அவரை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு தங்களிடம் உள்ள அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி பாஜக முயற்சித்து வருகிறது. மகா விகாஸ் அகாதி அரசு மெல்ல மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது. ஆனால், அதை பாஜக-வால் சகித்துக்கொள்ள முடியவில்லை” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.
முர்முவுக்கு ஒய்எஸ்ஆா் காங்கிரஸூம் ஆதரவு!
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளம், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியும் ஆதரவு தெரிவித்துள்ளார். “சுதந்திர இந்திய வரலாற்றில் பழங்குடியினத்தைச் சோ்ந்த ஒருவரை, அதிலும் ஒரு பெண்ணை குடியரசுத் தலைவராக நியமிப்பது வரவேற்கத்தக்கது” என்று ஜெகன் மோகன் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
போராடும் துணிச்சல் என்னிடம் உள்ளது: உத்தவ் பேச்சு
“முதல்வருக்கு உரிய ‘வர்ஷா’ பங்களாவை விட்டு நான் வெளியேறி விட்டேன். ஆனால், போரா டும் தைரியம் என்னிடம் உள்ளது. ஷிண்டேவுக்காக எல்லா விஷயங்களையும் செய்தேன். நான் வகித்து வந்த துறையை கொடுத்தேன். அவரது மகன் எம்.பி.யாக உள்ளார். ஆனால், எனது மகன் பற்றிய விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. எனக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அவர்களுக்கு தைரியம் இருக்கிறது என்றால், பால் தாக்கரே மற்றும் சிவசேனா வின் பெயரை கூறாமல் மக்களிடம் செல்ல வேண்டும்” என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட்: ரூ. 1 கோடி ஒதுக்கீடு
சென்னை, ஜூன் 24- சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவதை முன்னிட்டு செஸ் விளையாட்டு போட்டி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்தவும் 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களிடையே சதுரங்க போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. அதை முன்னிட்டு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் செஸ் போட்டி குறித்த புத்தாக்க பயிற்சி 1 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளி அளவிலும், வட்டார அளவிலும் மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 38 மாவட்டங்களிலிருந்து 152 மாண வர்,152 மாணவியர் என 304 மாணவ மாணவியர் சர்வதேச போட்டிகளை பார்வையிட வாய்ப்பு உள்ளது. 6ஆம் முதல் 8ஆம் வரை மாணவ - மாணவியர் 152 பேர் சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாட வாய்ப்பாக அமையும். இப்பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவது அவசியம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை,ஜூன் 24- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது கவனமாக அனுப்ப வேண்டும். அவர்க ளுக்கு தொற்று பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். குழந் தைகளுக்கு சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்” என்றார். தற்போதும் முகக்கவசம் அணிவது அவசியம். நம் உயிரை நாம் பாதுகாத்துக் கொள்வது அவசியம். கொரோனா அதி கரித்தாலும் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடு கள் இல்லை. கொரோனாவால் உயிரிழப்பு கள் குறைவாகவே உள்ளது, எனவே மக்கள் எச்சரிக்கையாக இருந்தாலே போதும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
கடலூர் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
கடலூர்,ஜூன் 24 கடலூர் அருகே நாட்டு பட்டாசு கொட்ட கையில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந் தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் எம்.புதூர் கிராமத்தில் மோகன் ராஜ் என்பவர் நாட்டு வெடி பட்டாசு தயாரிக்கும் கொட்டகையை வைத்துள்ளார். கோயில் திருவிழாக்கள் மற்றும் சுப, துக்க நிகழ்ச்சிகளில் வெடிக்க பயன்படுத்தும் நாட்டு வெடி பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என ஐந்து பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி பட்டா சுகள் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த ஐந்து பேரும் சிக்கினர். இந்த வெடிவிபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும், வசந்தா என்ற பெண்ணும், வைத்திலிங்கம் என்பவரும் படுகாயமடைந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், வசந்தா சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று (ஜூன் 24) உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கடலூர் முதுநகர் காவல் துறையி னர் நாட்டு வெடி தயாரிக்கும் கொட்டகை யின் உரிமையாளர் மோகன்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இஸ்ரேலின் அட்டகாசங்களுக்கு தடைகளை ஏற்படுத்துவது குறித்து ஹெஸ்புல்லா மற்றும் ஹமாஸ் ஆகிய இரண்டு அமைப்புகளும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறார் கள். பாலஸ்தீனம், லெபனான் மற்றும் இந்தப் பகுதிகளில் உள்ள சில நாடுகளில் நிலவும் தற்போ தைய சூழல் பற்றி இருதரப்பும் விவாதித்தனர். இஸ்ரேலைத் தடுத்து நிறுத்தும் பணியில் அனைத்து வகை யிலும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.
நாட்டின் எல்லைகள் மூடப்பட்டிருந்தால் தற்போது முன்னிற்கும் பிரச்சனைகள் மற்றும் பொரு ளாதாரப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது என்று கொலம்பியாவின் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் குஸ்தவோ பெட்ரோ கருத்து தெரிவித்துள்ளார். வெனிசுலாவுடனான எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளித்து பெட்ரோ பேச்சுவார்த்தையைத் தொடங்கி உள்ளார். ஆகஸ்டு 7 ஆம் தேதி பெட்ரோ பொறுப்பேற்கவிருக்கிறார்.
சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏராளமான கட்டுப்பாடுகளைக் கொண்டு வர ஜெர்மனி முடிவு செய்துள்ளது. தங்கள் நாட்டிற்கு எரிவாயு வழங்கி வந்த ரஷ்யா அதை நிறுத்தியதால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. “தட்டுப்பாடுள்ள பண்டமாக சமையல் எரிவாயு மாறிவிட்டது” என்று ஜெர்மனியின் பொருளாதாரத் துறை அமைச்சர் ராபர்ட் ஹேபக் கூறியுள்ளார். ஐரோப்பியக் கண்டத்தி லேயே பெரிய பொருளாதாரமான ஜெர்மனியில் எரிவாயு விநியோகம் தாராளமாக இருக்காது என்று கூறப்படுகிறது.