ராஜகீழ்ப்பாக்கம் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சுமார் 102ஏக்கர் என அரசு வரையறுத்துள் ளது. தாம்பரம் மாநகராட்சியின் 66 வது வட்டத்திற் குள் வரும் இந்த பகுதியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் ஒரு வழிபாட்டு தலமும் உள்ளது. ராஜகீழ்ப்பாக்கம் சந்திப்பு வேளச்சேரி சாலை - தாம்பரம் கிழக்கு புறவழிச் சாலையை இணைக்கும் வகையில் ஏரிக்குள் 200 அடி பறக்கும் சாலை அமைக்கப்பட உள்ளது. “இந்த பகுதியில் 40 வருடத்திற்கும் மேலாக மக்கள் வசிக்கின்றனர். 2015ம் ஆண்டு வெள்ளம் வந்த போது கூட பெரும்பகுதியான குடியிருப்புகள் பாதிக்கப்படவில்லை. குடியிருப்பு பகுதியானது ஏரி மட்டத்திலிருந்து பல அடி உயர்ந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஒருபகுதியினர் நடுத்தர வர்க்கத்தினராகவும், மறு பகுதியினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாகவும் உள்ளனர். குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகள் (சர்வே எண் 46/1ஏ1) நீர்ப்பிடிப்பு பகுதி இல்லை என்று பொதுப் பணித் துறையும் தெரிவித்துள்ளது. இருப்பினும் பட்டா வழங்காமல் உள்ளனர்” என்று பராசக்தி நகரை சேர்ந்த தேவராஜ் தெரிவித்தார். “நகர வளர்ச்சியின் காரணமாக விவசாயம் முற்றி லும் நின்றுவிட்டது. விவசாய நிலங்கள் அனைத்தும் குடியிருப்புகளாக மாறிவிட்டன. ஏரிக்கு மதகுகள் கூட இல்லாத நிலை உருவாகிவிட்டது. ஆகவே, தண்ணீர் நிற்கும் பகுதியை சுற்றி தடுப்புச் சுவர் அமைத்து, ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி பாதுகாக்க வேண்டும். குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்” என்று குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.