சென்னை,செப்.8- அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தாக்கல் செய்ய முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அனுமதியளித்தார். சட்டவிரோத பணப்பரி மாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி மனுவை யார் விசாரிப்பது என்ற கேள்வி எழுந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதி மன்றத்தில் விளக்கம் கேட்டு மனு தாக்கல்செய்யப்பட் டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுரேஷ் குமார், கே. குமரேஷ்பாபு ஆகியோர் கூறுகையில், ஜாமீன் மனு மட்டுமல்ல, அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள வழக்கையும் ஒன்றிய அரசு அறிவிக்கையின் அடிப்படை யில் சென்னை மாவட்ட முத ன்மை செசன்ஸ் நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். இதையடுத்து, சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல்செய்ய செப்டம்பர் 8அன்று காலை யில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி, மனுதாக்கல் செய்ய அனுமதி வழங்கினார்.