சென்னை, மார்ச் 6- பள்ளி சிறுமி கும்பல் பாலியல் வன்முறை வழக்கை சிபிசிஐடி விசா ரணைக்கு மாற்ற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: ராமநாதபுரம் பரமக்குடியில் 9ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை கும்பல் பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இந்த குற்றச்செயலில் தொடர்புடைய 5 பேரை கடந்த 4 ஆம் தேதி காவல்துறை போக்சோ வழக்கில் கைது செய்து முதல் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தக் கொடூர குற்றத்தை செய்தவர்கள் பரமக்குடி நகர் அதிமுக அவைத்தலைவர் சிகா மணி, சேனைத்தலைவர் புதுமலர் பிரபாகர் ராஜா, முகமது, கயல்விழி மற்றும் உமா என்பது தெரிய வந்துள் ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் வெளியில், ஊடகங்களில் வெளியிடப் படாமல் ரகசியமாக பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவி யின் கல்வி தடைபடாத வகையில் நிதி உதவிகளை அரசு செய்ய வேண்டும். உடனடியாக இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்த உத்தர விட வேண்டும் என்றும் வலியுறுத்து கிறோம். சமீப காலமாக தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி, விடுதிகள் போன்ற கல்வி வளாகங்களில் பெண் குழந்தைகள் மற்றும் மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள் பல வடிவங்களில் தொடர்வதும், பல மாணவிகள் சந்தே கத்திற்கிடமான வகையில் தற்கொலை செய்து கொள்வதும் கவலை அளிப் பதாகும். தமிழ்நாடு அரசும், கல்வித்துறை யும் ஆய்வுகளின் போது, மதிப்பெண் கள் பெறுவது மட்டுமே மாணவர் களுக்கான இலக்காக மேற்கொள்ளா மல், மாணவர்களுக்கு நடைபெறும் பாலியல் சீண்டல்கள், பாலியல் வன்முறைகள் போன்றவைகளை ஆய்வு செய்ய வேண்டும், பாதிக்கப் பட்டவர்களை ஆற்றுப்படுத்து வதற்கான கவுன்சிலர்களை நிய மிக்க வேண்டும் எனவும் வலியுறுத்து கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.