முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமையன்று (பிப்.4) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இலக்கிய மலர் 2023”என்ற சிறப்பு மலரை வெளியிட, அதன் முதல் பிரதியை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிகளை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் புகழ்பெற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.