மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு வலியுறுத்தல்
புதுதில்லி, ஆக.5- ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை மீட்டெடுத்திட வேண்டும் என்றும், சட்ட மன்றத் தேர்தலை நடத்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு வலியுறுத்திக் கோரி யுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழுக் கூட்டம் தலை நகர் புதுதில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது வெளி யிடப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டி ருப்பதாவது: 2023 ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அரசமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டும், ஜம்மு-காஷ்மீர் மாநி லம் கலைக்கப்பட்டும் நான்கு ஆண்டு கள் நிறைவடைந்ததைக் குறிக்கிறது. அரசமைப்புச் சட்டம் மற்றும் கூட் டாட்சித் தத்துவத்தின் மீதான இந்தத் தாக்குதல்கள் ஜம்மு-காஷ்மீரில் வாழ்ந்து வந்த குடிமக்களின் உரிமை கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்துவிதமான தாக்குதல்களுக் கும் முன்னறிவிப்பாக அமைந்தது. ஒன்றிய அரசாங்கத்தின் நேரடி ஆட்சியின் கீழ் கடந்த ஐந்தாண்டு காலம் ஜம்மு-காஷ்மீரின் பிரத்யேக அடையாளத்தை மாற்றுவதற்காகவும் அங்கேயிருந்துவந்த நில உரிமை களில் மாற்றத்தைக் கொண்டுவருவ தற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதைப் பார்த்தோம். இது, மாநிலத்தின் மக்கள் தொகை அமைப்பை மாற்றுவதற்கான ஒருங்கிணைந்த நட வடிக்கையாகும்.
சிறைகளில் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள்
இந்தக் காலகட்டத்தில் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (Public Safety Act) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் (UAPA) போன்ற கொடுங் கோன்மை சட்டங்களைப் பயன் படுத்திக் கொண்டு அரசியல் தலை வர்களும் முன்னணிச் செயற்பாட்டா ளர்களும் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டிருந்தார்கள். நூற் றுக்கணக்கான அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளில் இருந்துவருகி றார்கள். இவர்களில் பலர் ஜம்மு- காஷ்மீருக்கு வெளியேயுள்ள சிறை களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசுத்தரப்பில் என்னதான் கூறப் பட்டபோதிலும்,
அங்கேயுள்ள பொருளாதார நிலைமை, வேலை யின்மை அதிகரித்திருப்பதால் நாளும் சீர்கேடு அடைந்துகொண்டிருக்கிறது. இது தேசிய சராசரியைவிட மூன்று மடங்குகள் என மதிப்பிடப்பட்டிருக்கி றது. ஆப்பிள் பழ விவசாயிகள் மற்றும் சிறிய வர்த்தகர்கள் போன்று பல்வேறு பட்ட மக்கள் திரளினரின் வாழ்வாதா ரங்கள் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. ஊடகங்கள் அரசின் ஒடுக்குமுறை யைக் கடுமையாக எதிர்கொண்டி ருக்கின்றன. கருத்துரிமையைக் கட்டுப் படுத்தும் விதத்தில் தணிக்கைவிதிகள் திணிக்கப்பட்டிருக்கின்றன. கொடுங் கோன்மைச் சட்டங்களின்கீழ் பல்வேறு இதழாளர்கள் சிறைகளில் அடைக் கப்பட்டிருக்கிறார்கள். அடிப்படையில் ஜனநாயகம் மறுக் கப்பட்டிருப்பதும், மக்களின் ஜன நாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருப்ப தும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்திட முடியாமல் தோல்வி யுற்றிருப்பதற்குக் காரணமாகி இருப்ப தைப் பார்க்கிறோம். பாஜகவின் நலன் களுக்கு ஆதரவாக தொகுதிகள் மறு பங்கீடு செய்யப்பட்ட பின்னரும் கூட, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மக்க ளின் பிரதிநிதித்துவம் குறைந்த பின்ன ரும் கூட, ஒன்றிய அரசாங்கம் ஜம்மு- காஷ்மீருக்குத் தேர்தல் நடத்திட முன்வரவில்லை. இவ்வாறு, அனைத்து அம்சங்களி லும், ஜம்மு-காஷ்மீரின் மக்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக தரம் தாழ்த்தப்பட்டிருக்கிறார்கள். எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு ஜம்மு-காஷ்மீர் சட்ட மன்றத்திற்கு உடனடியாகத் தேர்தல் நடத்திட வேண்டும் என்று கோரு கிறது.
கொடுங்கோன்மைச் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
ஜனநாயகம் மீட்டெடுக்கப்படு வதற்கு அனைத்து அரசியல் கைதி களும் விடுதலை செய்யப்பட வேண்டி யதும், ஆட்சியாளர்களை எதிர்த்தி டும் அரசியல் கட்சிகளையும், ஊட கங்களையும் நசுக்கிட, கொடுங்கோன் மைச் சட்டங்கள் பயன்படுத்தப்படு வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி யதும் அவசியமாகும். ஜம்மு-காஷ்மீர் மக்களின் குடியி ருப்பு நிலையை அரித்துவீழ்த்திட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றிய அரசாங்கத்தால் திரும்பப் பெறப்பட வேண்டும், அவர் களின் நில உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும். தங்கள் உரிமைகளை மீட்டெடுப்ப தற்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும், ஜன நாயக சக்திகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. (ந.நி.)