சென்னை,ஏப்.19- தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஏப்.19) அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அதில், இந்திய அரசமைப்புச் சட்டத் தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப் பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுப்படுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்க ளைப் பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளு மாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிபிஎம் வரவேற்பு இதனை வரவேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.சின்னதுரை,“அதி திரா விடர் நலத்துறையின் அறிவிப்புகள் நியாயமாக அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டும். ஆனால், மதம் மாறிவிட்டார் கள் என்ற ஒரே காரணத்திற்காக ஆதிதிராவிட மக்கள் புறக்கணிக்கப் படுவது வேதனையளிக்கிறது” என்றார். இந்த பிரச்சனை குறித்து மாநிலங் களவையில் எங்கள் கட்சியின் தலைவர் பிருந்தாகாரத் பல முறை வலியுறுத்தியிருக்கிறார். குரல் எழுப்பியிருக்கிறார். இந்நிலையில், ஆதி திராடவிடர் மக்கள் மதம் மாறினா லும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்திருக்கும் இந்த தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக வரவேற்கிறது” என்றும் அவர் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்), சு.ரவி(அதிமுக), ஜே.ஜி. பிரின்ஸ் (காங்.), ஜி.கே.மணி(பாமக), சிந்தனைசெல்வன்(விசிக), டி.ராமச்சந்திரன் (சிபிஐ), சதன் திருமலைகுமார் (மதிமுக), ஈஸ்வரன், வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோர் ஆதரித்தும் வரவேற்றும் பேசினர்.
பாஜக உறுப்பினர் வானதி சீனி வாசன் பேசும்போது, நீதிமன்ற வரம்புக் குள் இருக்கும் இந்த விவகாரம் குறித்து எதற்கு இப்போது தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கிறிஸ்தவர்க ளாக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், இஸ்லாமியர்கள் குறித்தும் தனது வன்மத்தை கொட்டித் தீர்த்தார். அப்போது திமுக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தை கள் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேரவை யில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து பேசிய பேரவைத் தலைவர் மு.அப்பாவு, “முதலமைச்சர் கொண்டு வந்திருக்கும் அரசினர் தனித் தீர்மானத்திற்கு உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என்றும் அவர் கூறியதுடன் வானதி தெரிவித்த விஷமத்தனமாக கருத்துக்கள் அனைத் தையும் அவை குறிப்பிலிருந்து முழுமையாக நீக்கம் செய்தார். இதனைத் தொடர்ந்து அமைதி திரும்பியது. மேலும், அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வருவதற்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும் பேரவைக்கும் முழு உரிமை உள்ளது. எனவே, நீதிமன்றத்தால் சட்ட மன்றத்தையும் அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவருவதையும் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறிய பேரவைத் தலைவர், உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறும் வழக்கிற்கும் இப்போது கொண்டுவந்திருக்கும் தீர்மானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்தார். இதனை யடுத்து, அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.