states

கொரோனா பரவல் அதிகரிப்பதால் நேரில் வருவதை தவிர்க்க வேண்டுகோள்

சென்னை,ஜூலை 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திரப்போராட்ட வீரருமான அன்புத்தோழர் என். சங்கரய்யா அவர்கள் ஜூலை 15 அன்று 101வது பிறந்த நாள் காணுகிறார். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தோழர் என்.எஸ். அவர்களின் 101வது பிறந்த தினத்தையொட்டி இன்று கட்சியின் மாநில தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, தோழர்கள் நேரில் வருவதை தவிர்க்கும்படி கட்சியின் மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். மேலும், மாநிலம் முழுவதும் ஆங்காங்கு தோழர் என்.எஸ்.  அவர்களின் 101வது பிறந்த நாள் நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டுகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.