நாகப்பட்டினம், ஏப்.2 - நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பகுதியை சேர்ந்த பிசி யோதெரபிஸ்ட் மாணவி சுபாஷினி உடலை இறந்து நான்கு நாட்களாகியும் உற வினர்கள் பெறவில்லை. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பகுதியை சேர்ந்த பிசி யோதெரபிஸ்ட் மாணவி சுபாஷினி (19). பாப்பாகோவில் ஊராட்சியில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி நிர்வாகத்தின் அராஜக நடவ டிக்கையால் கடந்த புதனன்று தற்கொலை செய்து கொண்டார். அம்மாணவி கல்விக்கட்டணம் செலுத்தாததால், வகுப்பறை வாயிலில் நிற்க வைத்தல், ஏளன மான வார்த்தைகளால் மாண வர்கள் முன்பு பேசியது உள்ளிட்ட காரணங்களால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தாக கூறப்படுகிறது. மாணவியின் உடல் நாகப்பட்டி னம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் உடற் கூராய்வுக்காக வைக்கப் பட்டுள்ளது. இறந்து நான்கு நாட்கள் ஆகியும் மாணவியின் உடலை பெற்றோர் இன்னும் வாங்கவில்லை. கல்லூரி நிர்வா கத்தினரை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் நீடிக்கும் என்று உறவினர்கள் கூறுகிறார்கள்.
அது வரை உடலை பெற மாட்டோம் என்று கூறிவிட்டனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலு வலக நுழைவாயிலில் முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கல்லூரி நிர்வாகத்தின் போக்கை கண்டித்து மனு அளித்தனர். கல்லூரி நிர்வாக தலைவர் ஆனந்த், முதல்வர் லட்சுமி காந்தன், பேராசிரியை ஜெனி ஷா ஆகியோரை கைது செய்திட வும், இறந்த மாணவிக்கு நியாயம் கிடைக்கவும் போராடி வருகின்ற னர். இந்தக் கல்லூரி அதிகப்படி யான கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதும்,
அதற்காக மாண வர்களை துன்புறுத்துவதும் பல மாணவர்களின் கல்வி இடைநிற்ற லுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. கல்வி கட்டணத்தை தாமதப்படுத்தும் மாணவர்களு க்கு, கல்லூரி நிர்வாகம் பல்வேறு வகையில் மன உளைச்சலை தருவதாகக் கூறப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகையையும் எடுத்துக்கொண்டு கட்டண வசூலிப்பும் நடைபெறுவதாக மாணவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை சம் பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தி னரை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். கல்லூரி நிர்வாகத்தின் தாளாளர் ஊர்காவல் படையின் கிழக்கு மண்டல தளபதி பொறுப்பில் உள்ளார். இவர்களை காவல் துறை கைது செய்யாமல் இழுத்த டிப்பு செய்வது, இன்னும் பல போராட்டங்களை முன்னெ டுத்துச் செல்லும் என்று பொது மக்கள் கூறுகின்றனர். இதனி டையே உறவினர்கள் நாகூர் கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.