சென்னை, மே 9- களவுபோன சொத்துக்களை மீட்டெடுத்தல் மிகப்பெரும் சவாலாக உள்ளது என்று காவல்துறை மானிய கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மானிய கோரிக்கையில் கூறியிருப்பதாவது: மத அடிப்படைவாதிகள் மற்றும் ரவுடிகளின் செயல்பாடுகளை கட்டுப் படுத்துவதில் கடுமையான அணுகு முறை பின்பற்றப்படுகிறது. நடப் பாண்டில் பதிவான 723 போக்சோ வழக்குகளில் 86 வழக்குகள் தண்டனை யில் முடிந்துள்ளது. மற்ற வழக்குகளில் நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. தாம்பரம் காவல் ஆணையர கம் அமைப்பதற்கு நிலம் ஒதுக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. டிஜிட்டல் மயமாக்கல், இணைய வசதிகள் மற்றும் கைப்பேசிகளின் பரவலான பயன்பாடு, இணையதள குற்றங்கள் வேகமாக அதிகரிக்க காரண மாக உள்ளது.
2011ம் ஆண்டு இணைய தள குற்ற புகார்களின் எண்ணிக்கை 748 ஆக இருந்த நிலையில் 2021ம் ஆண்டு 13 ஆயிரத்து 77 ஆக அதிகரித்துள்ளது. இணைய தள குற்ற வழக்குகளில் வெளி நாட்டினர் ஈடுபடுவதால் குற்ற வாளிகளை கைது செய்தல் மற்றும் களவுபோன சொத்துக்களை மீட்டெடுத் தல் மிகப்பெரும் சவாலாக உள்ளது. சாலை பாதுகாப்பு நடவடிக்கை களில் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்கள், மாநகரங்க ளில் மாவட்ட ஆட்சியர்களால் மாவட்ட சாலை பாதுகாப்பு குழுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட அதிகாரி கள் மூலம் ஒவ்வொரு முக்கிய சாலையிலும் சாலை பாதுகாப்பு தணிக்கை நடத்தப்படும். போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப் புணர்வை ஏற்படுத்தும் விதமாக குறும்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிலை திருட்டு தடுப்புப் பிரிவினரால் சிலை கடத்தல் வழக்குகளில் கைப் பற்றப்பட்ட சுமார் 300 உலோகச் சிலைகளை முப்பரிமாண வீடியோ படங்கள், சென்னை ஐ.ஐ.டி. மற்றும் திருநெல்வேலி இந்துக் கல்லூரியின் உதவியுடன் ஒரு முன்னோடி திட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.