states

ரங்கசாமி முதலைக் கண்ணீர் வடிக்கிறார்

புதுச்சேரி, டிச. 17- புதுச்சேரி முதலமைச்சர் ரங்க சாமி முதலைக் கண்ணீர் வடிப்ப தாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டி னார். இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: 2011ஆம் ஆண்டு புதுச் சேரிக்கு மாநில அந்தஸ்து கோஷத்தை முன்வைத்து வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ரங்கசாமி, அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தற்போது மாநில அந்தஸ்து கோஷத்தை ரங்கசாமி மீண்டும் கையில் எடுத்துள்ளார்.  சமூக அமைப்பினர் ரங்கசாமி யிடம் மாநில அந்தஸ்து கோரிக்கை மனு அளித்தபோது, நிர்வாகத்தில் கோப்புகளை அனுப்பினால் அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர், கால தாமதம் செய்கின்றனர் என  புலம்புகிறார். ஒன்றிய அமைச்சர்  கிஷன்ரெட்டி பங்கேற்ற விழாவி லும், நிர்வாக விஷயத்தில் ஒன்றிய அரசு தடையாக இருப்ப தாகக்கூறி ஆதங்கப்பட்டார். ஆட்சிக்கு வந்த 2 ஆண்டு களுக்கு பிறகு, தற்போது மாநில அந்தஸ்து வேண்டும்  என ரங்க சாமி வலியுறுத்துகிறார். பாஜக-என்ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மக்களவையில் எங்கள் கட்சி யின் எம்.பி. வைத்திலிங்கம் எழுப்பிய கேள்விக்கு, புது வைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என பதில் அளிக்கப் பட்டது. மாநில அந்தஸ்திற்காக ரங்கசாமி என்ன முயற்சி செய்தார்? வெறுமனே புலம்பி னால் மாநில அந்தஸ்து கிடைத்து விடுமா? புதுவை ஆளுநர், முதல மைச்சரோடு இணைந்து செயல்படுவதாகக் கூறுகிறார். ஆனால் ரங்கசாமி இடையூறு விளைவிப்பதாக கூறுகிறார். இதில் எது உண்மை? ரங்கசாமிக்கு தெம்பும், திராணியும் இருந்தால் கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும். ஒன்றிய அரசை எதிர்த்து அவர் போராடத் தயாரா? முன்னாள் ஆளுநர் கிரண்பேடி விஷம் கொடுத்து கொன்றார், தற்போதைய ஆளுநர் தமிழிசை வெல்லம் கொடுத்து கொல்கிறார். இதுதான் வித்தி யாசம். மாநில அந்தஸ்து விவகா ரத்தில் ரங்கசாமி தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.