states

மின்ஊழியர் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு: அரசு உறுதி

சென்னை, மார்ச் 28- மின்சார வாரிய ஊழியர்களின் கோரிக் கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் சுமூக தீர்வு  காணப்படும் என முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி பல்லாயிரக்கணக்கான ஊழி யர்கள் செவ்வாயன்று சென்னையில் திர ண்டு ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சங்கத்தின் தலைவர் எஸ். ராஜேந்திரன் (சிஐடியு), எஸ்.மூர்த்தி (மின்சார தொழிலாளர் சம்மேளனம்), வி.எஸ்.சம்பத்குமார் (பொறியாளர் சங்கம்), ஏ.சேக்கிழார் (எம்ளாயிஸ் பெட ரேஷன்), எம்.சுப்பிரமணியன் (எச்.எம்.எஸ்), சேவியர் (ஐஎன்டியுசி), டி.விஜ யரங்கன் (அண்ணா தொழிற்சங்கம்) ஆகி யோர் தலைமைச் செயலகத்தில் முதன்மைச் செயலாளர் உதயசந்திரனை சந்தித்து மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் 6 கோரிக்கைகளையும் உடனடியாக முதலமைச்சரின் கவ னத்திற்கு கொண்டு செல்வதாகவும், விரை வில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.