பிரசாந்த் கிஷோர் பீகாரில் 3 ஆயிரம் கி.மீ. நடைப்பயணம்
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், தனது சொந்த மாநிலமான பீகாரில், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி முதல் 3 ஆயிரம் கி.மீ. நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். “அரசியல் கட்சி என்பது தற்போது வரை எனது திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை” என்றும், “பீகாரில் மாற்றம் கொண்டு வரவிரும்பும் அனைவரையும் ஒன்று சேர்ப்பதே எனது நோக்கம். கடந்த சில மாதங்களில் நல்லாட்சியில் நம்பிக்கை கொண்டுள்ள 17 ஆயிரம் பேரை எனது குழு அடையாளம் கண்டுள்ளது” என்றும் கிஷோர் கூறியுள்ளார்.
ராணுவத்தினரின் ஓய்வூதியத்தை நிறுத்திய மோடி அரசு
ராணுவ வீரர்கள் 58 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்க முடியாத நிலையை மோடி அரசு ஏற்படுத்தியிருப்பதற்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். “ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற மோடி அரசின் ஏமாற்றத்திற்குப் பின், தற்போது ‘ஆல் ரேங்க், நோ பென்சன்’ என்ற கொள்கையை மோடி அரசு கையில் எடுத்துள்ளது. நமது ராணுவ வீரர்களை அவமதிப்பது நமது தேசத்தை அவமதிக்கும் செயலாகும்” என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அரசு வேலையை தாண்டி முக்கியமான மொழி இந்தி!
“இந்தி மொழி அரசு வேலைக்கானது மட்டுமல்ல அது ஒரு முக்கியமான மொழி” என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார். “இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களை பிராந்திய மொழிகளில் கற்பிக்க வேண்டும்” என்று கூறியிருக்கும் அவர், “இந்தியக் கல்விக் கொள்கையை வேலைவாய்ப்பு சார்ந்ததாக மாற்றுவது காவிமயமா?” என்றும் ஆவேசப்பட்டுள்ளார். “பாஜக தலைமையிலான அரசாங்கம் கல்வி முறையை காவி மயமாக்கவில்லை” என்றும் பிரதான் கூறிக்கொண்டுள்ளார்.
நாடு விபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது!
“விமானத்தை தலைகீழாக இயக்க முடியுமா? என என்னுடைய நண்பரான விமானி ஒருவரிடம் சமீ பத்தில் கேட்டேன். அவர் வாய்விட்டு சிரித்து விட்டார். ஆனால், இதுதான் தற்போது நடைபெற்று கொண்டிருக்கி றது. நாட்டின் தலைவர்கள் விமா னத்தை தலைகீழாக இயக்கி கொண்டி ருக்கிறார்கள். அனைத்தும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. விபத்தை நோக்கி நாம் பயணித்து கொண்டிருக்கிறோம்” என்று எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியுள்ளார். இந்தியா அதிநவீன சட்ட அமைப்பை கொண்டிருக்கிறது. ஆனால், அது சாதி, வர்க்கம், பாலினம், இனம் சார்ந்தே அமல்படுத்தப்படு கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஹஜ் யாத்திரைக்கு அனுமதி: முதல்வர் நன்றி
தென்மாநிலங்களைச் சேர்ந்த வர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நடைமுறை சென்னை விமான நிலை யத்திலிருந்து தொடர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வரு கிறது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கடிதம் மூலம் ஒன்றிய அரசை வலியுறுத்தினார். இந்த நிலை யில், 2023 ஆம் ஆண்டு முதல் சென்னை யில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படு வதாக ஒன்றிய அமைச்சர் நக்வி முத லமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார. அதில், 2023 முதல் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இடமாக சென்னை கருதப்படும் என்ற உறுதிமொழி அளித்த ஒன்றிய அமைச் சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு நன்றி. எதிர்காலத்தில் எந்த சூழ்நிலையி லும் சென்னையை ஹஜ் பயணத்திற் கான எம்பார்கேஷன் பாயிண்ட்டாக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் வழக்கு: சுப்பிரமணியசாமி உளறல்!
“1999-ஆம் ஆண்டு உச்ச நீதிமன் றம் அளித்த தீர்ப்பில் விடுதலைப் புலி கள் இயக்கத்தில் பேரறிவாளன் இணைந் ததாக கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு கருணை காட்டப்பட்டுள்ளது. இந் நிலையில், உச்சநீதிமன்றம் மேலும் ஒரு கருணை காட்டி பேரறிவாளனை விடுதலை செய்யப் போகிறதா?” என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவ் வாறு கருணை காட்டினால், அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் அந்த நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். இதனி டையே, பேரறிவாளன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது கூட தெரியாமல் சுப்பிரமணியசாமி ஏன் இப்படி உளறிக் கொட்டுகிறார் என்று பலரும் அவரை சமூகவலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.