states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. ஜூலை 24 தேதியுடன் பதவிக் காலம் நிறைவ டையும் குடியரசுத் தலை வர் ராம்நாத் கோவிந்த் துக்கு பிரியாவிடை வழங்  கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் வெங்கய்யா நாயுடு, நரேந்திரமோடி, ஓம் பிர்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மக்கள் காந்திய வழி யைத்தான் தேர்ந்தெ டுக்க வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் மக்  களை கேட்டுக் கொண்டார்.
  2. ஜார்க்கண்ட் மாநில மக்  கள் வீட்டில் மரம் வளர்த்  தால் ஒரு மரத்திற்கு 5 யூனிட் மின்சாரம் இல வசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறி வித்துள்ளார்.
  3. குரூப் 4 தேர்வையொட்டி மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்து இயக்கப்  படும் என போக்குவரத் துக் கழகம் அறிவித்துள் ளது. மையங்களின் எண்  ணிக்கைகளின் அடிப்  படையில் மாவட்ட ஆட்சி யர் அறிவுறுத்தலின் படி சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கையும் பகு திக்கு ஏற்ப கூடுதலாக அதிகரிக்கப்படும் என வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  4. பொறியியல் 2-ஆம் ஆண்டு நேரடிச் சேர்க் கைக்கான தேதி ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை நீட்  டிக்கப்பட்டுள்ளது. பாலி டெக்னிக் தேர்வு முடிவு கள் வெளியாக தாமதமாகி யுள்ள நிலையில், விண்  ணப்ப தேதி நீட்டிக்கப்படு வதாக அறிவிப்பு.
  5. ரஷ்யாவும், உக்ரைனும் உடன்பாட்டில் கையெழுத் திட்டுள்ளதால் உணவுப் பொருட்களுக்கான நெருக்கடி தளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் துர்க்கியேயின் முயற்சியால் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று, துறைமுகங்களில் தேங்கிக் கிடக்கும் உணவு தானியங்கள் உடனடியாக ஏற்றுமதி செய்வதற்கான உடன்பாடு எட்டப் பட்டுள்ளது. உடன்பாட்டில் கையெழுத்திடும் நிகழ்வு துர்க்கியே நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது.
  6. பிரிட்டனின் உளவுத்துறை நிறுவனமான எம்-16ன் கண்கள் சீனா மீது பதிந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்டு மூர் தெரிவித்துள்ளார். கொலோராடோ வில் நடைபெற்ற ஆஸ்பென் பாதுகாப்புக் கழகக் கூட் டத்தில் பேசிய அவர், ‘‘சீனாவின் தந்திரங்களைப் பார்க்கும் போதும், அவற்றை எப்படி அவர்கள் நடைமுறைப்படுத்து கிறார்கள் என்று கவனிக்கும்போதும், தங்கள் சக்திக்குட் பட்டு எதைக் கட்டி அமைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் எங்கள் நிறுவனம் அவர்க ளைக் கண்காணிப்பதற்கு முன்னுரிமை தருகிறது’’ என்றார்.
  7. ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான ஸ்மார்ட் அலபாமா, தனது  நிறுவனத் தொழிற் சாலையில் குழந்தைத் தொழிலாளிகளை வேலைக்கு வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹூண்டாய் நிறுவனத்திற்கு உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் பணியை இந்த நிறுவனம் செய்து வருகிறது. விசாரணையில், பன்னிரண்டு வயது சிறுவர்கள் சிலர் இந்த நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியவந்தது.