நாகர்கோவில் ,ஏப். 01 தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்ட மைப்பின் மாவட்ட பொதுக் குழு கூட்டம் தக்கலை அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமை வகித்தார். மேலும் துணைப் பொதுச்செயலாளர் சிவஸ்ரீ ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் ரைமெண்டு, மாநில செயற்குழு உறுப்பினர் சவரி முத்து, மாவட்ட துணைத் தலைவர் ஜாண் கென்னடி, மாவட்ட செயலாளர் டோ மினிக் ராஜ், பொருளாளர் பிரேம்குமார் உள்ளிட்டோர் பேசினர். நீட் இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான பங்கை வழங்க வேண்டும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று உயர் கல்விக்குச் செல்லும் மாணவியருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கிடவும், ஆங்கில வழி இணை பிரிவு மாணவர்களை பணியிட நிர்ணயித்துக்குக் கணக்கிட்டு இரண்டு ஆண்டு களாக வழங்கப்படாமல் உள்ள பணியிட நிர்ணய ஆணையை விரைந்து வழங்கிட வேண்டும், சுமார் ஐந்து ஆண்டுகளாக ஊதிய மின்றி பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு உடனடி யாக ஊதியம் வழங்கிட நட வடிக்கை எடுத்திட வேண்டும், மருதங்கோடு, ஏற்றக்கோடு, புதுக்கடை ஆகிய இடங்களில் உள்ள உதவி பெறும் பள்ளி ஆசிரி யர்களின் ஊதியம் உள்ளிட்ட இதர பணப் பலன்களை விரைந்து வழங்கிட தொடர் புடைய கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இக்கோரிக்கை களை வலியுறுத்தி மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.