திருச்செங்கோடு, ஏப்.3 மருந்துக்கடையில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்ததையடுத்து தனியார் மருந்து கடைக்கு சீல் வைத்து அதிகாரி கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து விவரம் வருமாறு: திருச்செங்கோட்டில் உள்ள மல்ல சமுத்திரம் வட்டாரம் ராமாபுரம் கிராமத் தைச் சேர்ந்தவர் ரம்யா (29), பிரகாஷ் தம்பதி. கர்ப்பிணியான ரம்யாவுக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட் டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டிருக்கிறார். ஆனால் சிகிச்சை பலனி ன்றி ரம்யா உயிரிழந்திருக்கிறார். இது தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா.பி.சிங் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் மருத்துவர் வளர்மதி தலை மையில் அரசு மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், காவல்துறை, வரு வாய்த்துறை அலுவலர்களை கொண்ட குழு அமைத்து விசாரணை மேற் கொள்ள உத்தரவிட்டார். விசார ணையில் உயிரிழந்த கர்ப்பிணியான ரம்யா தான் வசித்த பகுதியில் உள்ள மருதம் என்ற மருந்து கடையில் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப் பிட்டிருக்கிறார். இதையடுத்து மாத்திரை விற்ற மருதம் மருந்து கடையை ஆய்வு செய்ய விசாரணை குழுவினர் சென்ற போது கடை பூட்டியிருந்ததால் உரிமை யாளரை தொடர்பு கொண்டனர்.
அப்போது மருந்தகத்திற்கு முன் இருந்த பெட்டிகளில் பயன்படுத்தப் பட்ட காலி ஊசிகள் சிரஞ்சுகளை கண்டெ டுத்தனர். நீண்ட நேரமாகியும் கடை யின் உரிமையாளர் வராததால் கடந்த மார்ச் 31ம் தேதியன்று மருதம் மருந்த கத்திற்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால் மறுநாளான மார்ச் 31ம் தேதி இரவு 10.30 மணியளவில் சம்மந்தப்பட்ட மருந்த கத்தின் மேற்கூரையை பிரித்து மர்ம நபர்கள் சிலர் உள்ளே இருந்த மாத் திரை, மருந்துகளை எடுத்துச் சென்ற தாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சீல் வைக்கப்பட்ட கடையில் இருந்து மருந்துகள் எடுத்துச் செல்லப்பட்டதால் உரிமையாளர் முத்துசாமியை விசாரிக் குமாறு மல்லசமுத்திரம் வட்டார அலு வலர் மருத்துவர் கிருஷ்ணன் உத்தர விட்டதன் பேரில் காவல்துறையினர் வழ க்குப்பதிந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், “தேவையற்ற கர்ப்பத்தை, கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்பும் கர்ப்பி ணிகள், பயிற்சி பெறாத மருத்துவர் களிடமோ, அங்கீகாரம் பெறாத மருத்துவமனைகளிலொ கருக் கலைப்பு செய்ய மேற்கொள்ள வேண் டாம். மேலும் மருந்தகங்களில் மருத்து வரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாத மருந்து, மாத்திரைகளை விற்பவர்கள் மீதும், போலி மருத்துவர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என நாமக்கல் மாவட்ட ஆட்சித்லைவர் எச்சரித்துள்ளார்.