ரியோ டி ஜெனிரோ, நவ. 19 - அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி-20 அமைப்பின் 19-ஆவது உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் துவங்கியுள்ளது. இம்மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். உச்சி மாநாட்டில், ‘சமூக உள்ளடக்கம் மற்றும் பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம்’ என்ற அமர்வில் பேசிய மோடி, கடந்த ஆண்டு இந்தியா தலைமையில் ஜி-20 உச்சி மாநாடு நடை பெற்ற போது ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற கருப்பொருள் வைக்கப்பட்டி ருந்தது. அதுபோலவே இந்த உச்சிமாநாட்டிலும் கருப்பொருள் வைத்திருப்பது பொருத்தமானது. சர்வதேச அளவில் நடைபெறும் போர்களால் ஏற்பட்டுள்ள உணவு, எரிபொருள் மற்றும் உர நெருக்கடி தெற்கு உலக நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே தெற்கு லக நாடுகளின் சவால்கள் மற்றும் முன்னுரி மைகளை நாம் மனதில் கொள்ளும்போது மட்டுமே நமது விவாதங்கள் வெற்றிபெற முடியும் என்றார். சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் இந்தியாவில் உச்சி மாநாடு நடைபெற்ற போது நமது கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அதேபோல சர்வதேச அமைப்பு களில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் எனவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். சர்வதேச அரங்கில் வளரும் நாடுகளின் குரல்களை எதிரொலிக்கவும், பன்முகத்தன்மை வாய்ந்த உலக ஒழுங்கை கட்டமைக்கவும் சர்வதேச அரங்குகளில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும். அதற்காக வளரும் தெற்குலக நாடுகளின் கூட்டமைப்பாக உருவாகியுள்ள பிரிக்ஸ் பிளஸ் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தொடர்ந்து தாங்கள் அங்கம் வகிக்கக் கூடிய ஜி-20 உள்ளிட்ட கூட்டமைப்புகளில் தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும் என முடிவெடுத்துள்ளன. அதன் அடிப்படையிலேயே பிரதமர் மோடி சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த மாநாட்டுக்கு இடையே இத்தாலி, இங்கிலாந்து, இந்தோனேசியா, போர்ச்சுகல், நார்வே, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலை வர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். பொருளா தார ஒத்துழைப்பு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கிரீன் ஹைட்ரஜன், நீலப் பொருளாதாரம், கல்வி உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சர்வதேச நிதி அமைப்பின் துணைத்தலைவர் கீதா கோபிநாத்துனும் சந்திப்பை நடத்தியுள்ளார்.