சென்னை, மே 1- மதுரை மருத்துவக் கல்லூரி மாண வர்கள் சமஸ்கிருத மொழியில் உறுதி மொழி ஏற்ற விவகாரத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தின வேலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அரசு நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வர வேற்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 30 அன்று மருத்துவக் கல்லூரியில் நடைபெற் றது. மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன், பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பி னர்கள் புதூர் பூமிநாதன், வெங்கடே சன், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் கல்லூரி துணை முதல் வர், பேராசிரியர்கள், மாணவ மாண விகள் பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு வாசித்தனர். ஆங்கிலத்தில் ஏற்ற உறுதிமொழியில் சமஸ்கிருத வாக்கி யங்கள் இருந்ததாக சர்ச்சையும் எதிர்ப்பும் எழுந்தது. சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் என்ற உறுதிமொழி ஏற்றனர். இதனைத் தொடர்ந்து, மேடை யில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கபட்டது அதிர்ச்சி யளிக்கிறது என அதிருப்தி தெரி வித்தார். இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் மதுரை மருத்து வக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலி டம் விளக்கம் கேட்டுள்ளது.
சமஸ்கிருத உறுதிமொழிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை உடனே நட வடிக்கை எடுத்து, மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்தி ருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட் டுள்ளார். தன்னிச்சையாக விதி மீறி ஹிப்போகிரேடிக் உறுதி மொழிக்கு பதிலாக சம்ஸ்கிருத உறுதி மொழி எடுத்ததால் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. சமஸ்கிருத உறுதி மொழி ஏற்றது தொடர்பாக துறைரீதி யான விசாரணை நடத்தவும் மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகள், ஹிப்போகிரேடிக் உறுதி மொழியை தவறாது கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமஸ்கிரு தத்தில் உறுதிமொழி ஏற்றது கண்ட னத்துக்குரியது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கி.மு. 460 ஆம் ஆண்டிலிருந்து கி.மு. 370 ஆம் ஆண்டுவரை வாழ்ந்த ஹிப்போகிரேட் தான் மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். மருத்துவ தந்தையான ஹிப்போ கிரேட் பெயரில் உறுதிமொழி ஏற்பது தான் மருத்துவம் படிப்போரின் வழக்க மாக இருந்து வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதள பக்கத்தில் ஆங்கிலத் தில், சமஸ்கிருத வாக்கியங்கள் இருந்த உறுதிமொழியை மாணவர் சங்க பொதுச்செயலாளர் ஒருவர் தவறுதலாக பதிவிறக்கம் செய்து விட்டதாகவும், மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டால் சம்பந் தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.