பேனா நினைவுச் சின்னம்: ஐஐடி நிபுணர்கள் வடிவமைப்பு
சென்னை,ஜூன் 23- மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு பின் பகுதியில் பெரிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல்மேல் நடந்து சென்று பேனா நினைவுச் சின்னத்தை பார்வை யிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இந்நிலையில் பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் இனி அடுத்த கட்டமாக கட்டிட பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுக்குள் பேனா நினைவுச் சின்னத்தை கட்டி முடிக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. நினைவுச் சின்னத்தை வடிவமைக்க சென்னை ஐஐடி மற்றும் பிற நிபுணர்களுடன் கலந்தாலோசிக் கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னாள் தலைமை செயலர் சபாநாயகம் 100 வயதில் மறைவு
சென்னை, ஜூன் 23 - சென்னை, ராஜா அண்ணாமலை புரத்தில் வசித்து வந்தவர் சபாநாயகம். அவருக்கு வயது 100. இவர் 1947 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். முதல்வராக இருந்த ராஜாஜி யின் தனி செயலராக இருந்துள்ளார். கடந்த 1971 முதல் 1976 மார்ச் 11 வரை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றினார். கடந்த 1980 ஆக.31இல் பணி ஓய்வு பெற்றார். வியாழனன்று (ஜூன் 22) அவரது இல்லத்தில் காலமானார். அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சபாநாயகம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “ராஜாஜி, காமராஜர், கருணாநிதி உள்ளிட்ட முதல்வர்களுடன் பணியாற்றிய, நூற்றாண்டு நாயகர், முன்னாள் தலைமைச் செயலர் சபாநாயகம். கடந்த ஆண்டு, அவரது 100வது பிறந்த நாளில் பங்கேற்று, அவரது சிறப்புகளை எடுத்துக் கூறும் வாய்ப்பு கிடைத்தது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.
முன்னாள் எஸ்.பி மேல்முறையீடு
சென்னை, ஜூன் 23- ஐபிஎஸ் பெண் அதிகாரி யிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தமிழ்நாடு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மற்றும் அவரது குற்றத்தை மறைக்க முயன்ற கண்ணன் ஆகியோருக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி கடந்த 16 ஆம் தேதி தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி உத்தர விட்டிருந்தார். இந்நிலையில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
தீக்கதிர் முக்கிய செய்திகள்
- காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநி லத்தின் அனைத்து அரசுப் பேருந்து களிலும் 50% கட்டண தள்ளுபடி யுடன் பெண்கள் பயணம் செய்யும் முன்மொழிவுக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அனுமதி வழங்கி யுள்ளார்.
- ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்காக விண்ணப்பிக்க கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி, குன்னூரில் உள்ள எஸ்பிஐ வங்கி களில் கடந்த 2019-இல் ஒன்றிய அரசின் கிஷான் கேஸ் கிரெடிட் என்ற காளாண் வளர்ப்பு திட்டத்தில் ரூ.3.60 கோடி கடன் வாங்கி கொடுத்து, விவ சாயிகள் மீண்டும் செலுத்திய தவணை களை தொகையை செலுத்தாமல் மோசடி செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பல்வேறு காரணங்களால் தனியார் பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்பட்ட கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா வுக்கு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக எம்.பி. கனிமொழி உறுதி அளித்துள்ளார்.
- மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் துணை ஆட்சியராக இருப்பவர் நிஷா பங்ரே, தனது புதிய வீட்டிற்கு விழா கொண்டாட விடுப்பு கேட்டுள்ளார். விடுப்பு மறுக்கவே தனது துணை ஆட்சியர் பதவியை ராஜினாமா அறிவித்து மாநில அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளார் நிஷா பங்ரே.
- ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கவேண்டும் என உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது.
- தெலுங்கானா மாநில 10-ஆம் வகுப்பு சமூகப் பாடப் புத்தகங்களில் உள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலிருந்து ‘சோசலிஸ்ட்’ மற்றும் ‘மதச்சார்பற்ற’ சொற்கள் விலக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
- “கர்நாடகம் முற்போக்கான மாநில மாகவும், புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் செழிப்பான மையமாகவும் உள்ளது. இதனால் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் உட்பட எலன் மஸ்க்கின் பிற முயற்சிகளுக்குத் தேவையான வசதிகளை ஆதரிக்கவும் வழங்கவும் கர்நாடகம் தயாராக உள்ளது” என டுவிட்டர், டெஸ்லா நிறுவனரும், உலகின் முதன்மையான பணக்காரருமான எலன் மஸ்க்கிற்கு கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி பாட்டீல் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகச் செய்திகள்
காவல்துறை ஆவணங்களில் மோசடியாகத் திருத்தங் களைச் செய்தார் என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 1989-ஆம் ஆண்டில் ராணுவத்தில் அவர் பணியாற்றிக் கொண்டி ருந்தபோது, பெரும் பிணக்குவியல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது குறித்த விசாரணையைத் தடுக்கும் வகையிலேயே அவர் இந்த மோசடித் திருத்தங்களைச் செய்தார் என்று கூறப்படுகிறது.
ஜெர்மனியின் ரயில் போக்குவரத்து சங்கங்களில் ஒன்று, தனது உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பை நடத்தவிருக் கிறது. அந்நாட்டின் பொதுத்துறை ரயில் நிறுவனமான டச்சு பானுடன் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாமல் நிறைவு பெற்றது. ஏற்கனவே ஒரு மணிநேர வேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். முழுமையான வேலை நிறுத்தம் செய்யலாமா என்று சங்க உறுப்பினர்களிடம் கேட்டு இந்த வாக்கெடுப்பை நடத்துகிறார்கள்.
தங்கள் ஆட்சியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான கட்டுப்பாடுகளை நீக்கா விட்டால் சட்டரீதியான அரசாங்கம் என்று சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர் ரோஸா ஓடுன்பயேவா எச்சரித்துள் ளார். ஐ.நா. சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களுக்கு எதிராக தலிபான் நடந்து கொள்வதாக அவர் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.