states

12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதச் சம்பளம் வழங்கிடுக!

சென்னை, ஜுன் 13-  குறைந்த ஊதியத்தில் பணியாற்  றும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் களுக்கு மே மாதம் சம்பளத்தை தமி ழக அரசு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அரசுப் பள்ளிகளில் கடந்த 10  ஆண்டுகளுக்கும் மேலாக உடற் கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக் கலை  உள்ளிட்டு வாழ்வியல் திறன் பாடங் களை கற்றுக் கொடுக்கும் 12 ஆயிரம்  பகுதி நேர ஆசிரியர்கள் ரூ.10 ஆயிரம்  தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரு கின்றனர். குறைந்த ஊதியத்தில் பணி புரிந்து வரும் இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பள்ளி விடுமுறையான மே  மாதம் சம்பளம் வழங்கப்படுவ தில்லை. வயது மூப்பு காரணமாக வேறு பணிக்குச் செல்ல முடியாததால்  ஒவ்வொரு ஆண்டும் பெரும் சிர மங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் சம்பளம் வழங்கப்பட வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்  ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்கு நரகம் பகுதி நேர ஆசியர்களுக்கு மே  மாதம் சம்பளம் வழங்கப்படாது என்று  அறிவித்திருப்பது பகுதி நேர ஆசிரி யர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி யையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி யுள்ளது. எனவே, பகுதி நேர ஆசிரியர் களுக்கு மே மாதம் சம்பளம் வழங்குவ தோடு, நீண்டகாலமாக மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் இவர்களை பணி நிரந்தரம் செய்து இக்குடும்பங்களை பாதுகாக்க தமி ழக அரசு முன்வர வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.