states

அக்.2 மனிதச் சங்கிலி தொழிற்சங்கங்கள் பங்கேற்பு

அக்.2 மனிதச் சங்கிலி தொழிற்சங்கங்கள் பங்கேற்பு

சென்னை : சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், ஏஐடியுசி மாநிலப் பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி,எல்எல்எப் தலைவர்  க.பேரறிவாளன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டிக்கிற வகையிலும், தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கிற வகையிலும் அக்டோபர் 2 அன்று மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை இணைந்து அழைப்பு விடுத்துள்ளன. இது மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், சமூக அமைதி, மாநில வளர்ச்சி ஆகியவற்றை காப்பாற்றும் முயற்சியின் ஒரு நடவடிக்கையாகும்.  எனவே இந்த மனிதச் சங்கிலியில் தமிழக தொழிலாளி வர்க்கமும், உழைக்கும் மக்களும் பங்கேற்பது அவசியம். ஏஐடியுசி, சிஐடியு, எல்எல்எஃப் சங்கங்களின் முன்னணி ஊழியர்களும், உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் முழுமையாக பங்கேற்பார்கள்.  தமிழ்நாட்டின் அனைத்து பகுதி தொழிலாளிகளும் பங்கேற்று மனிதச்  சங்கிலி இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய  வேண்டும்.  மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவர்களோடு, மக்கள் ஒற்றுமையை காக்கும் இயக்கத்தையும் சம  நிலையில் வைத்துப்  பார்க்காமல்  தமிழக  அரசு மனிதச் சங்கிலி நடத்த  அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;