புதுதில்லி, ஜன.25- “பெரும் பிளவு, மதப் பிரிவினை வாதம், இதுவே மோடியின் புதிய இந்தியா” என பிரதமர் நரேந்திர மோடி மீது பிபிசி ஆவணப்படத்தின் இரண்டாம் பாகம் கடுமையான குற்றச்சாட்டுகளுடன் வெளியாகி யிருக்கிறது. 2002-ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு இருந்த நேரடித் தொடர்புகளை, பிபிசி செய்தி நிறுவனம், ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ (‘India: The Modi Question’) தலைப்பில், 2 பாகங்களைக் கொண்ட ஆவ ணப்படமாக தயாரித்து அதன் முதல் பாகத்தை கடந்த ஜனவரி 17 அன்று இங்கிலாந்தில் ஒளிபரப்பியது. ஆனால், இந்த ஆவணப்படத்தை, இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப விதிகள்- 2021ஐப் பயன்படுத்தி ஒன் றிய பாஜக அரசு அண்மையில் முடக்கியது. குஜராத் வன்முறை தொடர்பாக, 2005-ஆம் ஆண்டு இந்திய நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை துவங்கி, இந்த கலவரம் குறித்து, இங்கிலாந்தில் 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை இருந்த வெளியுறவுத் துறை முன்னாள் செய லர் ஜேக் ஸ்ட்ரா கூறிய கருத்துக்கள், குஜராத் கலவர புகைப்படங்கள் மற் றும் அறிக்கைகள், கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் கார ணம் என்பதைச் சுட்டிக்காட்டி பேசு வோரின் வீடியோ ஆகியவை இடம் பெற்றிருந்தன. “இந்துத்துவா தீவிர வாதிகளுக்கு மோடி மறைமுக மாக உதவினார்” என்று வைக்கப் பட்ட குற்றச்சாட்டுக்கள், “குஜராத் கலவரம் ஒரு இனச்சுத்திகரிப்புக் கான அனைத்து அடையாளங்களை யும் கொண்டிருந்தது” என்று பிரிட் டிஷ் அரசாங்கமே பகிரங்கமாக வைத்த குற்றச்சாட்டு - போன்ற ஆவ ணங்களும் வெளியாகி இருந்தன. இந்நிலையில், பிபிசி ஆவணப் படத்தின் இரண்டாவது மற்றும் இறுதி பாகமும், செவ்வாயன்று வெளியா னது.
இதில், 2014-ஐக் காட்டிலும், 2019- இல் அதிகமான பெரும்பான்மை யுடன் மோடி மீண்டும் தேர்ந்தெடுக் கப்பட்ட பின்னர், இந்தியாவின் பிர தமர் நரேந்திர மோடிக்கும் இந்தியா வின் முஸ்லிம் சிறுபான்மையினருக் கும் இடையிலான “சிக்கலான உறவு” குறித்து அலசப்பட்டு உள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரம் அளிக்கும் 370-ஆவது சட்டப்பிரிவு ரத்து, குடியுரிமை சட்டத்திருத்தம், வடகிழக்கு தில்லியில் 2020-ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட மதக்கல வரம் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட தரப்பி னரின் கருத்துகள், கல்வியாளர்கள், பத்திரிகை துறையினர், பொதுமக் கள், அரசு மற்றும் காவல்துறை தரப்பு என பல தரப்பினரின் கருத்துகள் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டுள் ளன. பாஜக- அதன் தரப்பு கருத்தை வெளிப்படுத்தவும் 3 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தாவு உள்ளிட்டோர் பாஜக தரப்பாக கருத்தைப் பதிவு செய்துள்ளனர். “இந்தியா: மோடிக்கான கேள்வி கள்” இரண்டாம் பாகத்தின் வீடியோ வானது, “குஜராத் வன்முறைச் சம்ப வத்தில் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்டோர், அவர்களது பாது காப்புக் காரணம் கருதி, இந்த ஆவ ணப்படத்தில் பங்கேற்க மறுத்து விட்டனர் என்று தெரிவித்துள்ளது. “இதில் கூறப்பட்டிருக்கும் குற்றச் சாட்டுகள் குறித்து கருத்துக் கூற, இந்திய அரசு மறுத்துவிட்டது” என்ற பதிவுடனேயே பிபிசி இந்த ஆவ ணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த வீடியோ யூடியூப்பில் வெளியா காமல் புதிய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.