பாக். முன்னாள் தலைமை நீதிபதி சுட்டுக்கொலை
இஸ்லாமாபாத், அக்.15- பாகிஸ்தானின் பலுசிஸ்தா னில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் தலைமை நீதிபதி சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் கரான் பகுதியில் உள்ள மசூதிக்கு வெளியே முன் னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முஹம்மது நூர் மெஸ் கன்சாய் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் படுகாயம டைந்த முஹம்மது மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழி யில் உயிரிழந்ததாக கரான் மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் தெரிவித்தார். “அச்சமற்ற நீதிபதி” மறை வுக்கு இரங்கல் தெரிவித்த முஹம் மது ஒரு அச்சமற்ற நீதிபதி, அவரது சேவைகள் மறக்கமுடியாதவை என பலுசிஸ்தான் முதல்வர் மிர் அப்துல் குதூஸ் பிசென்ஜோ தெரி வித்துள்ளார். 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் பயங்கர வாத தாக்குதல்களின் எண்ணிக் கை அதிகரித்துள்ளதாக பாகிஸ் தான் மோதல் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனத்தை மேற்கோள் காட்டி டான் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்த்து போராடுவேன்!
கட்சியின் மூத்த தலைவர் கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். மற்றவர் கள் போல என்னிடம் எந்த வாக்குறுதியும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் கொள் கைகளே எனது வாக்குறுதி. மோடி, அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களுக்கு எதி ரான செயல்பாடுகளில் ஈடுபடு வேன். பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என உதய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டு பிரகட னத்தில் கூறப்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்றால் அதனைச் செயல்படுத்து வேன் என்று மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
லஞ்ச ஒழிப்பு காவலர்கள் சோதனை: ரூ.1.12 கோடி பறிமுதல்
சென்னை, அக்.15- தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு அரசு அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபடு வதை தடுக்க தீபாவளிக்கு முன்பாக மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவல கங்களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்துவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டும் பத்திரப்பதிவு, ஊரக வளர்ச்சி, போக்கு வரத்து, மின்துறை வட்டாட்சியர் அலுவல கங்கள், மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம், டாஸ்மாக் உள்ளிட்ட 14 துறைகளைச் சேர்ந்த 27 அரசு அலுவல கங்களில் சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் காட்டப்படாத 1,12,57,803 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ள தாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித் துள்ளது. அதிகபட்சமாக திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ரூ.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மவுனப் போராட்டம்: மருத்துவர்கள் அறிவிப்பு
சென்னை,அக்.15- அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை, துணைச் செயலாளர் பாலமுருகன் ஆகியோர் சனிக்கிழமை(அக்.15) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “அரசு மருத்துவர்க ளுக்கு அரசாணை 354-ன்படி 12 ஆண்டு களில் 4 ஊதியப்பட்டை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன் வைத்திருக்கிறோம். எங்கள் கோரிக்கை களை நிறைவேற்றக் கோரி மெரினா விலுள்ள கருணாநிதி நினைவிடத்தில் நவம்பர் 30 அன்று மவுனப் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டத்துக்கு முன்னதாகவே எங்களது நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வயிற்றில் பால் வார்க்க வேண்டும்” என்றனர்.
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை,அக்.15- தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிக ளில் மேல் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக ஞாயிற்றுக் கிழமை (அக்.16) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் கன முதல் மிக கனமழை பெய்யும். மேலும் திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாத புரம், சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திரு வாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தமட்டில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய மாடல்
“சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பெரும் சாதனைகளை சீனா படைத்துள்ளது. இதன் மூலமாக மனிதகுல மேம்பாட்டிற்கான புதிய மாடலை சீனா உருவாக்கியிருக்கிறது” என்று கம்போடிய கல்வியாளர் தோங் மென்ங்டேவிட் பாராட்டியுள்ளார்.