சென்னை,செப்.5- வளர்ச்சியடைந்த இந்தி யாவாக மாற்றப் போகிறோம் என்று கூறிய மோடியால், 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டு ம்தான் மாற்ற முடிந்திருக் கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். ஜி 20 உச்சி மாநாடு செப்ட ம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்பிதழ் குடியரசுத் தலைவர் மாளிகையில் இரு ந்து அரசியல் தலைவர் களுக்கு அனுப்பப்பட்டுள் ளன. அதில் இந்திய குடி யரசுத் தலைவர் என்று குறிப் பிடாமல், பாரத குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்கு பல் வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ள னர். எதிர்வரும் நாடாளு மன்ற சிறப்புக் கூட்டத் தொட ரில், இந்தியா எனும் பெயரை பாரதம் என அதிகாரப்பூர்வ மாக மாற்றக் கோரி பாஜக எம்பிக்கள் பேசி வருகின்றனர். அழைப்பிதழில் பெயரை மாற்றியதை கண்டித்துள்ள முதலமைச்சர் மு.க ஸ்டா லின், தனது டிவிட்டர் வலைத் தள பக்கத்தில், பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. இந்தியாவை வளர்ச்சி மிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந் திர மோடி அவர்களால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெய ரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பாஜகவை விரட்டும்!” என்று தெரிவித்துள்ளார்.