states

மதச் சாயம் பூசும் பாஜகவினர் - ஒடிசா அரசு எச்சரிக்கை

ரயில் விபத்து நடந்த இடத்தில் மசூதி இருப்பதாக வும், இதனால், ஒடிசா ரயில் விபத்துக்கு முஸ்லிம்கள் காரணம் என்றும் வழக்கம்போல பாஜக-வினர் கேவலமான வேலையில் இறங்கியுள்ளனர். இதையடுத்து, “ரயில் விபத்துக்கு மதச்சாயம் பூசும் வகையில் செயல்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு. தற்போதைய ரயில் விபத்து ஏற்பட்ட நிலையில் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது’’ என்று ஒடிசா மாநில அரசு எச்சரித்துள்ளது. மேலும், ஒடிசா விபத்தில், மதத்தை இணைத்து கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்ட கர்நாடகா மாநிலம் தும்கூரு மாவட்டம் குப்பி தாலுகா ஒசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் கர்நாடக காவல்துறையை அணுகியுள்ளது.