சென்னை, ஜன. 28- மார்ச் 2024க்குள் ரேசன் கடை களில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது விநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத் தப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, போலிக் அமிலம், வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணோட்ட சத்து சேர்ந்து செறிவூட்டப்பட்ட மணிகளாக தயார் செய்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளை, சாதாரண அரிசி யுடன் 1:100 என்ற விகிதத்தில் கலந்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி, பொதுவிநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்கு விநியோகம் செய்யப்படுகிறது.
ஒன்றிய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாகத் தேர்வு செய்துள் ளது. அவற்றில் தமிழ்நாட்டில் விருது நகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில் பொது விநியோ கத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கு 1.12.2022 முதல் இந்த அரிசி வழங்கப்படுகிறது. மார்ச் 2024க்குள் ஒன்றிய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியைப் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மதிய உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசியை இந்திய உணவுக் கழகத்திலிருந்து பெறப்பட்டு பல்வேறு மாவட்டங்க ளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்படுகிறது. இந்த அரிசியை வழங்குவதால் இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய மூன்று நுண்ணோட்டச் சத்துக் குறைபாட்டினைப் போக்கி ரத்தச் சோகையில்லா நிலையினை உருவாக்கி ஆரோக்கியமாக வாழ உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.