ம.பி., சத்தீஸ்கர்: வேட்பு மனு துவங்கியது
மத்தியப் பிரதேசம், சத் தீஸ்கர் (2-ஆவது கட் டம்) சட்டப் பேரவைத் தேர்த லுக்கான வேட்புமனுத் தாக் கல் சனிக்கிழமை துவங்கி யது. சத்தீஸ்கரில் முதற்கட்ட மாக 20 தொகுதிகளுக்கான வேட்புமனு ஏற்கெனவே துவங்கி விட்ட நிலையில், இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கும், ஒரேகட் டமாக தேர்தல் நடைபெறும் மத்தியப் பிரதேசத்தின் 230 தொகுதிகளுக்கும் சனிக்கிழ மையன்று வேட்புமனு தாக் கல் துவங்கியது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, 7 ஆயிரத்து 714 கன அடியிலிருந்து, 5 ஆயிரத்து 132 கன அடியாக குறைந்துள்ளது. அணை யில் இருந்து குடிநீர் தேவைக் காக விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் சனிக்கிழமை காலை 47.33 அடியாகவும், நீர் இருப்பு 16.17 டி.எம்.சி.யாக வும் உள்ளது.
பாஜக குடும்பத்தினரை களமிறக்கும் காங்கிரஸ்
230 தொகுதிகளைக் கொண்ட மத்தி யப்பிரதேச மாநி லத்தில் நவ., 17 அன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர் தல் நடைபெறவுள்ளது. காங் கிரஸ் கட்சி 230 தொகுதி களுக்கும் வேட்பாளர் பட்டி யலை வெளியிட்டுள்ளது. 2-ஆவது கட்டப் பட்டியலில் பாஜக தலைவர்களின் குடும் பத்தினருக்கு சீட் கொடுத்து, பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ-க்களான கிரிஜா சங்கர் ஷர்மா, பன்வர் சிங், ஷெகாவத் மற்றும் அபய் மிஸ்ரா ஆகியோரும், பாஜகவின் முக்கிய முன் னாள் தலைவர்கள் 5 பேரும் காங்கிரஸ் கட்சியின் 2-ஆவது வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முக்கியமாக காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியாத விந்த்யா மற்றும் பந்தேல் கண்ட் ஆகிய தொகுதிகளில் பாஜக குடும்பத்தைச் சேர்ந் தவர்களையே வேட்பாளர் களாக காங்கிரஸ் நிறுத்தி யுள்ளது. ஏற்கனவே மத்தி யப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறியுள்ள நிலை யில், வலுவாக உள்ள இடங்களில் பாஜக தலைவர் களின் குடும்பத்தினரை கள மிறக்கும் காங்கிரஸ் கட்சி யின் வியூகத்தால் பாஜக கதி கலங்கியுள்ளது. இதனால் பாஜகவிற்கு பெரும்பாலான இடங்கள் கைவிட்டுப் போக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஆரிய ஆதிக்கத்திற்கு தான் திமுக எதிரி, ஆன்மிகத்திற்கு அல்ல: முதலமைச்சர்
சென்னை, அக். 21 திமுக ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரியே தவிர ஆன்மிகத்திற்கு எதிரி யல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற சமூக வலைதள தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் செனாய் நகரில் நடைபெற்ற நீட் விலக்கு நம் இலக்கு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசு கையில், இந்தியாவிற்கு எதிரானது பாஜக என்றும், வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் மூலம் பாஜக வதந்தி பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார். கோயிலும் பக்தியும் அவரவர் உரிமை, என்றும் கோயில் கள் கொடியவரின் கூடாரமாக மாறி விடக்கூடாது என்ற கலைஞரின் வசனம் தான் அவர்களுக்கு பதில் என்றும் முதலமைச்சர் ஆவேசமாக தெரிவித்தார். மேலும் திமுக ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரியே தவிர ஆன்மிகத்திற்கு எதிரியல்ல என்றும் 1000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்தது திமுக அரசுதான் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
வட கிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம்
சென்னை, அக். 21- தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை (அக். 22) வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சனிக்கிழமையே (அக். 21) வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்கு நர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி களில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்ற ழுத்தத் தாழ்வுப் பகுதியாக வெள்ளிக் க்கிழமை உருவாகியுள்ளது. இது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திங்களன்று (அக். 23) வலுப்பெறக் கூடும். மேலும், குமரிக் கடல், அதை யொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஞாயிறன்று வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடும். வடகிழக்கு பருவமழை தொடக்க நிலையில் வலு குறைந்து காணப் படும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளில் வரும் வியாழன் வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, கேரளாவில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கப்பட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே சனிக்கிழமை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்கு நர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ள நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.