“முறைசார்ந்த மாத ஊதிய வேலைகள் மற்றும் சுய வேலைகளுக்கான வாய்ப்பு கள் அனைவருக்கும் சமமாக உருவாக்க ப்பட்டுள்ளன.” இது 2022ல் மோடி கூறியது. “இன்று இந்தி யாவின் வளர்ச்சி வேகமும் வளர்ச்சிக்கான பாதையும் அனைத்து பிரிவுகளிலும் புதிய வேலைவாய்ப்புகளுக்கான சூழல்களை உருவாக்கிக் கொண்டுள்ளன.” இது மோடி 2023ல் சொன்னது. ஆனால் உண்மை என்ன? 2011-12/ 2022-23 காலகட்டத்தில் சுய வேலை வாய்ப்புகள் தான் அதிகரித்துள்ளன. சுய வேலைவாய்ப்புகளில் ஈடுபடும் ஆண்களின் எண்ணிக்கை இந்த கால இடைவெளியில் 51.5%லிருந்து 53.4%ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 56.5%லிருந்து 64.3% ஆகவும் அதிகரித்துள்ளது. சுயவேலை வாய்ப்புகள் என்பது: விவசாயம்/ கிராமப்புற நெசவு/ மண்பாண்டங்கள் செய்தல்/ நகரங்களில் சாலையோர வியாபாரம்/ முடி திருத்துவோர்/ தையல் பணி/ ஜெராக்ஸ் கடை/ தேநீர் கடை ஆகியவை அடங்கும். சுய வேலைவாய்ப்புகளில் ஈடுபடும் பெண்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 8% உயர்ந்துள்ளது. குடும்பம் சார்ந்த சிறு/ குறு தொழில்களில் ஊதியமில்லாமல் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை 25% லிருந்து 33% ஆக உயர்ந்துள்ளது. 25 வயதுக்கும் கீழே உள்ள பட்டதாரிகளில் 42%ம் 25-35 வயதுடைய பட்டதாரிகளில் 29% பேரும் வேலை இல்லாமல் அவதிப்படுகின்றனர். மறுபுறத்தில் அரசின் கணக்குபடியே 9.75 லட்சம் மத்திய அரசு பணிகள் காலியாக உள்ளன. இளைஞர்களுக்காகவே எனது அரசு செயல்பட்டுக் கொண்டுள்ளது என்றார் மோடி. ஆனால் இளைஞர்கள்தான் கடும் வேதனையில் உள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைகள் என மோடி கூறியது வெறும் வாய்ப்பந்தலாகவே உள்ளது. வேலையின்மையை அதிகரித்த பா.ஜ.க. அரசாங்கத்தை அகற்றுவது மட்டுமே வேலைவாய்ப்புகளை உருவாக்கும். பா.ஜ.க. அரசை விரட்டுவோம்! வேலையின்மைக்கு முடிவு கட்டுவோம்!