states

பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டெல்லாம் செவ்வாய்க்கிரகத்திற்கு செல்ல முடியாது!

சென்னை, ஜூன் 25 - பொய்யான வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பி  நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை கரு வாக கொண்டு “ராக்கெட்ரி - நம்பி விளைவு”  என்ற படத்தை நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ளார். மாதவனுக்கு ஜோடியாக நடிகை  சிம்ரன் நடித்துள்ளார். இவர்களுடன் நடி கர்கள் ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகி யோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி  என 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்  படம், ஜூலை 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி, சென்னையில் செய்தி யாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய நடிகர்  மாதவன், “அமெரிக்கா, ரஷ்யா, சீனா  மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலகோடி  செலவழித்து செவ்வாய்க் கிரகத்துக்கு செயற் கைக் கோளை அனுப்பி வெற்றி பெற்றன. ஆனால், இந்தியா 2014-ஆம் ஆண்டு சிறிய எஞ்சினை வைத்துக்கொண்டு செவ் வாய்க்கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பியது. செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பிய களம் 32-வது முறை யில்தான் வெற்றிபெற்றது. இந்த ராக் கெட்டை விண்ணில் செலுத்தவும், செவ் வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைய வும் நமது முன்னோர்கள் உருவாக்கிய பஞ்சா ங்கத்தின்படியான நட்சத்திர மற்றும் கோள்  களின் வரைபடம்தான் (Celestial Map) இந்தியக் குழுவுக்கு உதவியது” என்று கூறி யிருந்தார்.

இந்தத் தகவலை “விஞ்ஞானி நம்பி  நாராயணனின் மருமகனும், விஞ்ஞானியு மான அருணன்-தான் தன்னிடம் தெரி வித்தார்” என்றும் மாதவன் குறிப்பிட்டிருந்தார். நடிகர் மாதவனின் இந்தக் கருத்துதான்  சமூகவலைதளங்களில் தற்போது விவாதங்  களைக் கிளப்பி இருக்கிறது. “‘ராக்கெட்ரி’ என விண்கலத்தை மையமாகக் கொண்டு விஞ்ஞானம் சார்ந்த படத்தை எடுத்திருக்கும் மாதவனே இப்படி விஞ்ஞானத்திற்கு புறம்  பாக பேசலாமா?” என்று பலரும் கருத்துக்  களைப் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே, “ஆயிரம் ஆண்டு களுக்கு முன் கணிக்கப்பட்ட பஞ்சாங் கத்தை வைத்துக்கொண்டு தற்போது செவ்  வாய்கிரகம் செல்வது முடியாத காரியம்” என தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தி ருக்கும் பேட்டியில் ‘சந்திரயான்’ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். இதுதொடர்பாக மேலும் கூறியிருக்கும்  அவர், “பஞ்சாங்கம் ஆண்டாண்டு காலமாக  இருக்கக்கூடிய ஒன்று கிடையாது. இது ஆயி ரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப் பட்ட பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு செவ்வாய்க் கிரகம் செல்வது என்பது முடி யாத காரியம்.  ஏனென்றால், அந்தந்த நேரத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் இடங்களை கணித்து வைத்துக்கொண்டு அதற்கு ஏற்ப  உலகளவில் எங்களுக்கு என்று இருக்கக்  கூடிய பஞ்சாங்கம் மாறுதல் அடைகிறது. அந்த மாறுதலுக்கு ஏற்பவே புதிதாக உரு வாக்கப்பட்ட ‘அர்பனாக்’ என்ற பஞ்சாங் கத்தை வைத்து எந்த நேரத்திலிருந்து ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பயணத்தை தொடங்க வேண்டும். எவ்வளவு வேகத்தில் எப்படி சென்றால் இலக்கை அடைவோம் என்பதை தற்போது அறிவியல்பூர்வமாக  கோள்கள் இருக்கக்கூடிய இடங்கள், கோள் களின் பயணங்கள், நாம் பூமியில் இருக்கக் கூடிய இடம், நாம் அனுப்பக்கூடிய பிஎஸ்எல்வி எப்படி போகும், சந்திரயான் எப்படி போகும்? என பல ஆய்வுக்கு பிறகு  நேரம் குறிக்கிறோம். ஆனால் இவர்கள் சொல்லும் பஞ்சாங்கத்தை பார்த்து நேரம்  குறிப்பது கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.