states

புதிய எல்லைகளைத் தொடும் மோடி அரசின் தாக்குதல்கள் - சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “வரலாற்றில் முதன் முறையாக எதிர்கட்சித் தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மோடி அரசின் தாக்குதல் புதிய எல்லைகளைத் தொடுகிறது. ஜனநாயகம், நீதித்துறை, மணிப்பூர் அமைதி, தமிழ்நாடு, நல்லோர்களின் இதயம். இவையெல்லாம் நேற்று (ஆகஸ்ட் 10) குறிவைத்து தாக்கப்பட்டன” என்று சு. வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.