சென்னை, ஏப்.3 துபாய் பயணத்தின் போது நான் பல கோடி ரூபாயை எடுத்துச் சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். அதற்கு நமது கூட்டணி கட்சி தலைவர்களே பதில் அளித்து விட்ட தால் பதில் அளிக்கப்போவதில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் தமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து அவர் பேசியதாவது: இந்த திருமணம் சுயமரியாதை உணர்வுடன் நடக்கும் திருமணம். சீர் திருத்த திருமணம். தமிழ் திரு மணம். தமிழுக்கு பெருமை சேர்க்கும் திருமணம். தமிழுக்கு பெருமை சேர்க்க த்தான் செம்மொழி என்ற பெருமையை கலைஞர் பெற்றுத்தந்தார். அந்த பெரு மையோடும், உணர்வோடும் இந்த திருமணம் நடந்துள்ளது. 1967-ல் அண்ணா முதலமைச்சராக பதவியேற்றதும் சீர்திருத்த திருமணம் செல்லும் என்ற தீர்மானத்தை நிறை வேற்றினார்.
தமிழக மக்கள் நாடாளு மன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்த லிலும் மதசார்பற்ற கூட்டணிக்கு மிகப் பெரிய ஆதரவு தந்தார்கள். அதன் பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் நம்மீது வைத்துள்ள நம்பி க்கையின் காரணமாக வெற்றியை தேடித்தந்தார்கள். அந்த உணர்வோடு இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள் ளேன். துபாய் பயணத்தின் போது நான் பல கோடி ரூபாயை எடுத்துச் சென்ற தாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். அதற்கு நமது கூட்டணி கட்சி தலைவர்களே பதில் அளித்து விட்டதால் மேலும் பேச தேவை யில்லை. சிக்கலில் இருந்து தப்பிக் கவே டெல்லி சென்றதாகவும் எதிர்க் கட்சி தலைவர் பேசியுள்ளார். நான் யாரு டைய காலிலும் விழ செல்ல வில்லை. தமிழகத்தின் உரிமைக்காக சென்றேன். எனக்கு யாருடைய காலிலும் விழ வேண்டிய அவசியம் இல்லை. விழவும் மாட்டேன். ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல. பதவி ஏற்ற போதே குறிப்பிட்டேன் முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலின் நான். இவ்வாறு அவர் பேசினார். திருமண விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, சேகர்பாபு, சி.வி.கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் திருமாவளவன், சிறுபா ன்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.