states

மலைப் பாதையில் மினிவேன் கவிழ்ந்து விபத்து! பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

திருப்பத்தூர், ஏப்.2- திருப்பத்தூர் அருகே மலைப் பாதையில் சென்ற மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில், 11 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜவ்வாது மலையிலுள்ள சேம்பரை என்ற பகுதியி லிருக்கும் ஆஞ்சநேயர் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற் காக மலை கிராம மக்கள் குடும்பம், குடும்பமாக சனிக்கிழமை(ஏப்.2) காலை சென்றுள்ள னர். புலியூர் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரும் திறந்த மினிவேனில், அந்தக் கோயி லுக்குப் புறப்பட்டனர். வேனை பரந்தராமன் என்பவர் ஓட்டிச்சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மலைப் பாதை சரியில்லாததால், கட்டுப்பாட்டை இழந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இந்த கோர விபத்தில், 11 பேர் மரண மடைந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக சுகந்தா, துர்கா, மங்கை, செல்வி மற்றும் 12 வயது சிறுமிகளான பவித்ரா, பரிமளா ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலும், 16 வயதாகும் ஜெயப்பிரியா என்ற  சிறுமி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். இந்த நிலையில், விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆக அதிகரித்திருக்கிறது. உயிரிழந்த அனைவரும் பெண்கள் என்பது குறிப்பி டத்தக்கது.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக, திருப்பத்தூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மலைப் பகுதி என்பதால், தொலைத்தொடர்பு வசதியில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இந்த விபத்து, பிற்பகல் 11.30 மணிக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது. சிக்னல் பிரச்னைக் காரணமாக, காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்குக்கூட தகவல் தெரிவிக்க முடியா மல் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.இந்த விபத்து அனை வரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.  நிவாரணம் அறிவிப்பு இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின், பலியானவர்களின் குடும் பங்களுக்கு தலா இரண்டு லட்சமும், படுகாயமடைந்தவர்க ளுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.