சென்னை, ஏப். 12- புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் ரூ.90 கோடி செலவில் அனைத்து வசதிகளு டன் கூடிய திறந்தவெளி மற்றும் உள் விளையாட்டு அரங்கங்கள் உள்ளடக்கிய மாவட்ட விளையாட்டு வளாகங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மானிய கோரிக்கை கள் மீது நடைபெற்ற விவாதத்தை தொடர்ந்து பதிலளித்து பேசிய அமைச் சர் உதயநிதி, நமது பாரம்பரிய விளை யாட்டுகளான கபடி, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளுடன், கிரிக்கெட், கூடைப் பந்து உள்ளிட்ட 15 விளையாட்டுக ளுக்கான போட்டிகள் பள்ளி, கல்லூரி கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவுகளில் 30 மாவட்டங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாக நடத்தப்பட்டு வருகிறது. கிராமப்புறத்தின் மூளை முடக்கு களில் இருந்து 3 லட்சத்து 71 ஆயிரத்து 355 வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றுள்ள வீரர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்தி அதிக பதக்கங்கள் வெல்லும் மூன்று மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் கோப்பைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ்செல்வி தற்போது எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் முயற்சியை மேற் கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 5,000 அடியை தாண்டி சென்று கொண்டிருக் கிறார். தமிழ்நாட்டில் இருந்து முதன் முறையாக இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ள அவரது முயற்சி வெற்றிகரமாக அமைவதற்கு பேரவை சார்பில் வாழ்த்துவதாக கூறினார். பின்னர் புதிய அறிவிப்புகளை வெளி யிட்டார். அனைத்து ஊராட்சிகளுக்கும் 42 கோடி செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். நாட்டிலேயே முதல்முறையாக 6 கோடி ரூபாய் செலவில், 6 மாவட்ட விளையாட்டு அரங்கங்களில், பிரத் யேக ‘பாரா’ விளையாட்டு மைதானங் கள் உருவாக்கப்படும். மாமல்ல புரத்தில் உலக சர்ஃபிங் லீக் போட்டி கள் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலத்தின் விளையாட்டு மேம்பாட்டிற்கான வழிகாட்டியாக, விரிவான மற்றும் முழுமையான தமிழக விளையாட்டு கொள்கை உருவாக் கப்படும். ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் திறன் கொண்ட வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, 25 லட்சம் ரூபாயில் இருந்து, 30 லட்சம் ரூபாயாக உயர்த் தப்படும். பன்னாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்வதை ஊக்குவிக்கும் திட்டத்தில், ஓராண்டுக்கான நிதியுதவி, 10 லட்சம் ரூபாயில் இருந்து, 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.