சென்னை, அக். 25 - தமிழ்நாட்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது உண்மையிலேயே ஆளு நருக்கு அக்கறையிருந்தால், கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான சங்க ரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி வலியுறுத்தியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தமிழ கம் நினைவுகூரத் தவறி விட்டதாக ஆளு நர் ஆர்.என். ரவி பேசியது, தலைவர்களின் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி வரு கிறது. திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, சென்னை தலைமைச் செயலகத்தில் புத னன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களை திமுக நினைவுகூரத் தவறிய தாக, தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு அனைத்தும் தெரிந்தவர்போல, ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து கூறியிருக் கிறார். அதற்கான பதிலை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஏற்கெனவே தெரிவித்துள்ளார். தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேல் அக்கறை உள்ளவர் போல பேசுகிற தமிழக ஆளுநர், ஊடகங்கள் வழி யாக நான் அளிக்கும் பேட்டியை நிச்சய மாக கேட்பார் என்று கருதுகிறேன்.
ஆளு நருக்கு உண்மையிலேயே தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் மீது அக்கறை இருக்குமானால் மதுரை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிமன்றப் பேரவைக்குழு இரண்டும் சேர்ந்து, ஆட்சிக்குழுவின் மூலமாக 18.8.2023 அன்றும், ஆட்சிமன்ற பேரவைக்குழுவில் 20.9.2023 அன்றும் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு ஒரு பரிந்துரையை அனுப்பி வைத்தன. சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் சட்ட விதியின்படி, ஆட்சிமன்றப் பேர வைக் குழுவில் தீர்மானமாக நிறை வேற்றப்பட்டால், கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும். ஆனால், அதற்கு வேந்தரின் கையெழுத்தும் தேவை என சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கரய்யா மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். கல்லூரி படிப்பையே இழந்து 9 ஆண்டுகள் சிறையில் வாடி இருக்கிறார். அதோடு இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்து போராடியவர். அவரை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு தகைசால் விருது சங்கரய்யா விற்கு வழங்கப்பட்டது. ஆனால், அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை ஏற்றுக் கொள்ளாமல், பேசியிருப்பதை கேட்டாலே சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது ஆளுநருக்கு அக்கறை இருக்குமா இல்லையா? என்று தெரியும். மேலும், மதுரையில் 2 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. அன்றே அவ ருக்கு கௌரவ பட்டம் வழங்குவதற் கான கோப்புகளில் ஆளுநர் கையெழுத்து இடவேண்டும் என்று கேட்டுக்கொள் கிறேன். சங்கரய்யாவின் வரலாற்றை பார்த்து தெரிந்து கொண்டாவது ஆளுநர், இதில் கையெழுத்திட வேண்டும்.’’ இவ்வாறு க. பொன்முடி கூறியுள் ளார்.