சென்னை, ஜூன் 8- உள்நோக்கத்தோடு தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை எழுப்பினால் வழக்கு தொடரப்படும் என அண்ணாமலைக்கு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி எச்ச ரிக்கை விடுத்துள்ளார். சென்னை எழும்பூர் சிஎம்டிஏ அலுவல கத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியா ளர்களை சந்தித்தார். அப்போது பாஜக தலை வர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டு களுக்கு விளக்கம் அளித்தார். தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சார்பில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 30 நாட்கள் சோதனை முறையில் ஒற்றைச்சாளர முறை யில் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக் கப்பட்டது. பின்னர் மே மாதம் முதல் ஒற் றைச்சாளர சோதனையில் குறைகள் நிவர்த்தி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றது. இன்னும் 2 மாதத்தில் சிஎம்டிஏ சம்பந் தப்பட்ட சேவைகள் மற்றும் அனுமதிகள் அனைத்தும் ஆன்லைனில் ஒற்றைச்சாளர முறையில் வழங்கப்படும். மக்களின் கால விரயத்தை குறைக்க அனுமதிகள் வழங்குவதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10 ஏக்கர் வரை லே அவுட் ஒப்புதல்களை மாவட்ட அலு வலகங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். 5 ஏக்கர் வரை நகராட்சி அலுவலகங்களில் ஒப்பு தல் வழங்கப்படும். 40 ஆயிரம் சதுரடி வரை யிலான கட்டுமான அனுமதிகள் மாவட்ட அலு வலகத்திலேயே வழங்கப்படும். துறைரீதியாக உள்ள காலிப்பணி யிடங்கள் காரணமாக சேவைகள் வழங்க தாம தமாகிறது. காலிப்பணியிடங்கள் விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. பணி களை தாமதமானாலும் குறைகள் சொல்கின்றனர்.
விரைந்து முடித்தாலும் குறை கூறுகின்றனர். 37 விழுக்காடு காலிபணி யிடங்கள் இருக்கும் போதும் பணிகள் துரிதமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால், பாஜக தலை வர் அண்ணாமலை சிஎம்ஏடி வில் மூன்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் கூறுவது போல் யாருக்கும் உடனடியாக அனுமதி வழங்கவில்லை. அவர் சொன்ன தில் 90 விழுக்காடு தேதிகள் பொய்யான தாக உள்ளது. அதே போல் அண்ணாமலை, சிஇஓ பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டது போல குறை கூறுகிறார். ஆனால், இந்த பணியிடம் 1978 இல் இருந்தே நடைமுறையில் உள்ளது. இதுவரை 46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியில் இருந்துள்ளனர். ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கப்பட வில்லை. அனைத்து நிறுவனங்களுக்கும் விதி களின் படி அனுமதி வழங்கப்படுகிறது. விதிமுறைகள் பின்பற்றி அனுமதி அளிக்க கால அவகாசம் தேவைப்படும். சிஎம்டிஏவில் அண்ணாமலையையே அமர வைத்தாலும் எட்டு நாளில் அனுமதி கிடைக்காது. நீண்ட காலமாக அனுமதி கிடைக்காத நிறு வனங்களுக்கு அனு மதி அளிக்க சிறப்பு முகாம் கூட நடத்த தயார். அண்ணாமலை சரியான ஆதரங்க ளோடு பேசினால் நல்லது. சரியான விவ ரங்களை திருத்திக்கொள்ள தயார். ஆனால், உள்நோக்கத்தோடு தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை எழுப்பினால் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.