சென்னை, ஏப்.10- சட்டப்பேரவையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானத்தை வர வேற்று பேசிய அவை முன்னவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்,“ ஆளுநர் பதவி என்பது தேவையில்லை என்று திமுக ஆரம்பித்த காலத்திலேயே பிரகடனப்படுத்தியிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநர் பதவி கொண்டு வரப் பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு பதவி வகிக்கும் மாநிலத் தில் யாரோ ஒருவரை ஆளுநராக நியமித்தால், அவர் ஆட்சிக்கு தொல்லை கொடுப்பார் என்று ஆயி ரம் முறை எடுத்து கூறியிருக்கிறோம். எங்களைப் போலவே பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், ஒன்றிய அரசுக்கு மாநில அரசை ஆட்டிப்படைப்பதற்கு, அரசமைப்புச் சட்டம் 356-ஐ பயன்படுத்தி கலைப்பதற்கு, தங்களுக்கு ஒரு ஏஜென்ட் வேண்டும் என்பதற்காக ஆளுநர் பதவியை உருவாக்கி கொடுத்தார்கள். இந்திய அளவில் பல மாநிலங்களில் ஏற் பட்ட குழப்பங்களுக்கு காரணம் ஆளுநர்கள்தான். கேரளாவில் முதன்முதலாக நம்பூதரி பாட்டின் ஆட்சிதான் ஆளுநரால் கலைக் கப்பட்டது. அங்கு குடியரசுத் தலை வர் ஆட்சியை பிரகடனப்படுத்திய போது இஎம்எஸ் அன்றைக்கு பேசிய பேச்சு இன்றைக்கும் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது. அந்த அளவுக்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்”என்றார்.
சட்டத்தை மீறுவதே வாடிக்கை!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றுவதற்கு முன்பாகவே அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட உரையில் சில திருத் தங்களை கொடுத்தார். அதை திருத்தம் செய்துதான் ஆளுநருக்கு கொடுத்தோம். ஆனால், அவர் அந்த அறிக்கையில் இல்லாத சிலவற்றை யும் சேர்த்துக்கொண்டார். பலதை யும் தவிர்த்துவிட்டார். அப்போது தெரிந்துகொண்டேன். வேகமாக செல்லும் இந்த ரயில் எங்கேயோ தடம் புரளப்போகிறது என்று நினைத் தேன். அது நடந்தது. உடனடியாக முதலமைச்சர் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போதாவது ஆளுநர் திருந்தினாரா? என்றால் இல்லை. ஒரு சட்டப்பேரவை தீர்மானம் அல்லது மசோதாக்களை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தால் அதை, அவர் நிராகரிக்கலாம். அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம். எதுவும் செய்ய வில்லை என்றால் நிறுத்தி வைக்க லாம். ஆனால், அது எவ்வளவு காலம் என்பதை நிர்ணயம் செய்ய வில்லை. சட்டத்தின் இந்த ஓட்டையை ஆளுநர் ரவி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார் என்றும் குற்றம் சாட்டினார்.