புதுதில்லி, ஜூன் 27 - மகாராஷ்டிர துணை சபாநாயகர் அனுப் பிய தகுதி நீக்க நோட்டீஸிற்கு, எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு ஜூலை 11-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை அதிருப்தி எம்எல்-ஏ-க்கள் 16 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்று கூறியுள்ள நீதிபதிகள், இந்த வழக்கில், மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால், சிவசேனா தலைமைக் கொறடா சுனில் பிரபு, சிவசேனா சட்டப்பேர வைக் கட்சித் தலைவர் அனில் சவுத்ரி ஆகி யோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலை மையில், ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி ஆட்சியில் உள்ளது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய இந்த கூட்டணி இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்தி வரும் நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அவரது சிவ சேனா கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களே அண்மையில் போர்க்கொடி தூக்கினர்
சிவசேனா மூத்த தலைவரும், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில், அணிதிரண்ட இவர்கள், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜக-வுடன் சிவசேனா கூட்டணி சேர வேண்டும் என்று கூறி வருகின்றனர். மகாராஷ்டிர சட்டமன்றத்தில், சிவசேனா வுக்கு 55 எம்எல்ஏ-க்கள் இருக்கும் நிலையில், அவர்களில் 38 எம்எல்ஏ-க்கள் பாஜக-வின் ஆத ரவுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியிலுள்ள ரேடிசன் புளூ சொகுசு ஹோட்டலில் தங்கி யுள்ளனர். தற்போது தங்களை தனிக்கட்சி யாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இவர்களை மும்பைக்கு வருமாறு கட்சித் தலைவரும் முதல்வருமான உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தார். கட்சி எம்எல்ஏ-க்களின் கூட்டத்தையும் கூட்டினார். ஆனால், இந்தக் கூட்டங்கள் எதற்கும் வராததால், அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்யுமாறு மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வலிடம், சிவசேனா சட்டப் பேரவைக் கட்சித் தலைவரான அஜய் சவுத்ரி கடிதம் அளித்தார்.சிவசேனா மூத்த தலைவரும், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில், அணிதிரண்ட இவர்கள், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜக-வுடன் சிவசேனா கூட்டணி சேர வேண்டும் என்று கூறி வருகின்றனர். மகாராஷ்டிர சட்டமன்றத்தில், சிவசேனா வுக்கு 55 எம்எல்ஏ-க்கள் இருக்கும் நிலையில், அவர்களில் 38 எம்எல்ஏ-க்கள் பாஜக-வின் ஆத ரவுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியிலுள்ள ரேடிசன் புளூ சொகுசு ஹோட்டலில் தங்கி யுள்ளனர். தற்போது தங்களை தனிக்கட்சி யாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இவர்களை மும்பைக்கு வருமாறு கட்சித் தலைவரும் முதல்வருமான உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தார். கட்சி எம்எல்ஏ-க்களின் கூட்டத்தையும் கூட்டினார். ஆனால், இந்தக் கூட்டங்கள் எதற்கும் வராததால், அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்யுமாறு மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வலிடம், சிவசேனா சட்டப் பேரவைக் கட்சித் தலைவரான அஜய் சவுத்ரி கடிதம் அளித்தார்.
துணை சபாநாயகரும், அந்த கடிதத்தை ஏற்று, ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்எல்ஏ-க் களுக்கு, “உங்களை தகுதி நீக்கம் செய்யக் கூடாது?” என்று நோட்டீஸ் அனுப்பினார். “இந்த நோட்டீஸிற்கு ஜூன் 27-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் பதிலளிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டிருந்தார். இதனால் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டதால், அதனை தற்காத்துக் கொள்ள ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் உச்சநீதிமன்றத்தை அணுகினர். நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜே.பி. பார்திவாலா ஆகியோர் அடங்கிய விடு முறை கால அமர்வு முன்பு, இந்த வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஷிண்டே தரப்பினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘‘மகாராஷ்டிர மாநில ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி அரசுக்கு சிவசேனா கட்சியை சேர்ந்த 38 எம்எல்ஏ-க்கள் ஆதரவை திரும்பப்பெற்று இருப்பதால், சட்டப் பேரவையில் மகாராஷ்டிர அரசு பெரும்பா ன்மையை இழந்து விட்டது. அதுபோலவே சிவசேனா சட்டப்பேரவை கட்சித் தலைவராக அஜய் சவுத்ரி நியமிக்கப்பட்டதும் செல் லாது. சிவசேனாவின் பெரும்பான்மையான எம்எல்ஏ-க்கள் இந்த முடிவை ஆதரிக்க வில்லை’’ என வாதங்களை எடுத்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிர துணை சபாநாயகர் அனுப்பிய தகுதி நீக்க நோட்டீஸிற்கு பதில் மனு தாக்கல் செய்ய சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு ஜூலை 11 மாலை வரை கால அவகாசம் வழங் கிய நீதிபதிகள், அதுவரை அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது. ஏக்நாத் ஷிண்டே மற்றும் 15 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால், சிவசேனா தலைமைக் கொறடா சுனில் பிரபு, சிவசேனா சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் அனில் சவுத்ரி ஆகியோர் பதி லளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், ‘‘அனைத்து தரப்பினரும் ஐந்து நாட்களுக்குள் எதிர் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும். எதிர் வாக்கு மூலங்களுக்கு பதிலளிக்க ஷிண்டே முகாமுக்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாகவும், அடுத்த விசாரணை ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறி வழக்கை ஒத்திவைத்தனர். “மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வாலுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தகுதிநீக்க விவகாரத்தில் துணை சபாநாயகர் அவசர மாக செயல்படுவது விரும்பத்தகாத விளைவு களுக்கு வழிவகுக்கும்’’ என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.