states

கோவில்களை கொள்ளையடிக்க பாஜக - ஆர்எஸ்எஸ் திட்டமா?

சென்னை,ஜன.27- கோவில்களை பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பல் கொள்ளையடிக்கும் கூடாரங் களாக மாற்ற  வேண்டுமா? என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயற் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: அண்மையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை , வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் பேசும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்து அற நிலையத்துறையை அகற்றுவதற்கான கோப்பில் முதல் கையெழுத்திடுவோம் என பேசியுள்ளார். பிரிட்டிஷ் ஆட்சி யாளர்கள் கோவில்களை சிறப்பாக பரா மரித்தார்கள் என்ற சான்றிதழையும் வழங்கி இருக்கிறார். இவரது பகல் கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஏனெனில் தமிழ்நாட்டில் இவர்கள் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்பது ஊரறிந்தது. இருப்பினும் இவரது நிலைபாட்டுக்கான எதிர்ப்பைப் பதிவு செய்வது அவசியம்.

சென்னை மாகாணத்தில் இருந்த நீதிக்  கட்சி அரசாங்கம் 1925 இல் இருந்து எடுத்த முயற்சிகளின் தொடர்ச்சியாகவே இந்து அறநிலையத்துறை அமைக்கப்பட்டது. கோவில் நிர்வாக ஊழல், கோவில்கள் முறையாக பராமரிக்கப்படாதது, கோவில் சொத்துக்கள் தனியார்களால் கொள்ளையடிக்கப்பட்டது உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளின் காரண மாகவே நிர்வாகத்தை ஒழுங்குபடுத்து வதற்காக இந்த துறை அமைக்கப்பட்டது. இதன் செயல்பாட்டில் பிரச்சனை இருந்தால் தாராளமாக குற்றம் சாட்டலாம்,  ஒழுங்குபடுத்தலாம். ஊழல் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போராடலாம். அதைவிடுத்து பாஜக, இந்து முன்னணி போன்ற இயக்கங் களை சேர்ந்தவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், கோவில்களை எங்களிடம் விட்டு விடுங்கள் என்று தொடர்ச்சியாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது அறநிலையத்துறை மற்றும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை அண்ணாமலை யாரிடம்  ஒப்படைக்கப் கோருகிறார்?. அவர்களது கட்சியின் நிர்வாகிகளிடமா?, ஆர்எஸ்எஸ் தொண்டர்களிடமா? என்பதை தெளிவு படுத்த வேண்டும். இவர்களிடம் ஒப்படைத் தால் கோவில் சொத்துக்களும், நகை களும், வரலாற்று புகழ் பெற்ற சிலைகளும் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கு ஏதா வது குறைந்தபட்சம் உத்தரவாதம் உண்டா?. தற்போது, கோவில் நிர்வாகங் களின் பெயரில் உள்ள சில ஆயிரம் கோடி ரூபாய் வைப்புத் தொகை பாதுகாக்கப் படுமா?.

இக்கோரிக்கையை எழுப்புவது பக்தி யினால் அல்ல, இந்துத்துவா சித்தாந்தத் தை அமல்படுத்தவும், கோயில்களை குறு கிய அரசியல் ஆதாயத்திற்காக பயன் படுத்தவும், வரைமுறையற்ற கொள்ளை யடிக்கவுமான நோக்கமே இதற்கு பின் னால் உள்ளது. மேலும் கோவில் நிலங்களில் சாகுபடி செய்யும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளையும், கோவில் நிலங்களில் குடியிருந்து வரும் பல லட்சம் ஏழை, எளிய மக்களையும் அடித்து விரட்டி விட்டு இவைகளை அபகரிக்கும் நோக்குட னேயே இக்கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தத்தில் கோவில் களையும், கோவில் சொத்துக்களையும் சீரழித்து மக்களின் வழிபாட்டு உரிமையை அழித்திடவே இக்கோரிக்கை இட்டுச் செல்லும் என்பது தெளிவு.  அனைத்து அரசுத்துறைகளையும் தனி யாருக்கு தாரை வார்க்கும் பாஜக, கோவில் நிர்வாகங்களையும், சொத்துக் களையும் தனியாருக்கு தாரை வார்க்க களமிறங்கியுள்ளது. இதனை ஒருபோதும் தமிழ்நாடு மக்கள் அனுமதிக்கமாட் டார்கள். அண்ணாமலையின் இக்கோரிக் கையை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும், பக்தர்களும் கோவில் நிலங் களில் சாகுபடி செய்யும் மற்றும் குடி யிருக்கும் பொதுமக்களும் கிளர்ந்தெழ வேண்டுமென  சிபிஎம் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.