கொடைக்கானல், மே 13- கொடைக்கானல் பிரை யண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் லில்லியம் மலர் களை சுற்றுலாப்பயணி களை வெகுவாக கண்டு ரசித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரை யண்ட் பூங்கா எதிர்வரும் கோடை விழா, மலர் கண்காட்சிக்கு தயாராகி வருகிறது. இதற்காக பல லட்சம் மலர் நாற்றுக்கள் வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வர வழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது. தற்போது அவைகள் சுற்றுலாப்பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் வகையில் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன. பல வண்ண ரோஜா மலர்கள், டெல்பீனியம், சால்வியா, டயாந்தஸ், ஹாலண்டுல்லா, பிங்க் ஆஸ்டர் போன்ற பல்வேறு வகை மலர்கள் பூத்து குலுங்கும் சூழலில், நெதர்லாந்தில் இருந்து வர வழைக்கப்பட்ட லில்லியம் மலர்கள் சுற்றுலாப் பயணி களை வெகுவாக கவர்ந்துள்ளது. லில்லியம் மலர் வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, மெரூன் ஆகிய 5 வண்ணங்களில் பூத்து குலுங்குவதை சுற்று லாப்பயணிகள் ஆச்சர்யத்து டன் கண்டு ரசித்து செல்கின்ற னர்.