states

தபால் ஊழியர் நியமன முறையில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை வழங்குக!

சு.வெங்கடேசன் எம்.பி., 
ஒன்றிய அமைச்சருக்கு கடிதம்

மதுரை, செப்.16- தபால் துறையில் மக்கள் தொடர்பு நிலையில் உள்ள அலுவலர்கள் நிய மனங்களுக்கு நடைபெறும் தேர்வு களில் மாநில மொழி தேர்ச்சிக்கான தேர்வு இணைக்கப்பட வேண்டும் என  ஒன்றிய அரசின் தகவல் தொடர்பு  அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி யிருப்பதாவது: தபால் துறையில் மக்கள் தொடர்பு நிலையில் உள்ள அலுவலர்கள் நியமனங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் மாநில மொழி தேர்ச்சிக்கு எந்த ஏற்பாடும் இல்லை.  அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், ஆய்வாளர்கள் ஆகிய பணிகளை செய்யும் ஊழியர்களுக்கான தேர்வுகளை அலு வலர் நியமன ஆணையம் (Staff Selection Commission) நடத்தும் போது தமிழில் அவர்கள் உரையாடக் கூடியவர்களா என்று கூட சோதித்துப் பார்ப்பதில்லை.  

இவர்களிடம் சேவை நாடி  வரும் பொதுமக்கள் திண்டாடு கிறார்கள். அந்த பணியாளர்களும் தங்கள் பணியை திறம்பட ஆற்ற முடிவதில்லை. ஆய்வா ளர்கள் கிராமப்புற அஞ்சல் அலுவல கங்களின் செயல்பாடுகளை கண்கா ணிப்பவர்கள்.  கடந்த 10 ஆண்டுகளில் ஆய்வா ளர் பணிக்கு நடைபெற்றுள்ள நேரடி நியமனங்களில் தேர்வு செய்யப்பட்ட 60 பேரில் 57 பேர் வெளி மாநி லங்களை சேர்ந்தவர்கள் என்று அறிய வருகிறது. தபால் அலு வலகங்களின் கதவைத் தட்டு பவர்களில் பெரும்பான்மை யோர் கிராமங்களில் இருந்து வருபவர்கள். பொருளாதா ரத்தில் அடித்தட்டு மக்கள். இத்தகைய கோடிக்கணக் கான மக்களை இணைக்கிற தபால் ஊழியர்கள் தமிழ் அறிந்திருக்க வேண்டாமா? எனவே, தபால் ஊழியர் நியமன முறையில் தமிழ்த் தேர்ச்சிக்கான தேர்வு இணை க்கப்பட வேண்டும். பள்ளி இறுதித் தேர்வு/ மேல்நிலை கல்வித் தேர்வில் தமிழ் பாடமாக இருந்து அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் தேர்வில் விதி விலக்கு அளிக்கலாம். இக்கோரிக்கையை பரிசீலித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். இது அஞ்சல் சேவையை மேம்படு த்தும். அதை நாடி வரும் மக்க ளுக்கும் பெரும் பயன் தரும். ஒன்றிய அரசு இக்கோரிக்கை க்கு செவிமடுக்குமென்று நம்புகிறேன்.  இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

;