திருவனந்தபுரம், அக்.23 - கேரள அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத்தின் 51 ஆம் ஆண்டு மாநாடு திருவனந்தபுரத்தில் அக்.22 அன்று துவங்கியது. சங்கத்தின் பொதுச் செயலாளர் அசோக்குமார் மாநாட்டை துவக்கி வைத்தார். சங்கத் தின் தலைவர் பி.ஹணி தலைமை வகித் தார். சம்பள சீர்திருத்த கமிஷனை உட னடியாக கேரள அரசு நியமிக்கப்பட வேண்டுமென்று மாநில அரசுக்கு மாநாடு வேண்டுகோள் விடுத்தது. மாநாட்டின் துவக்க நிகழ்வில் இயக் கத்தின் தியாகிகளுக்கும், அண்மை யில் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரிக்கும் மாநாட்டு பிரதி நிதிகள், அஞ்சலி செலுத்தினர். செயலாளர் நாஞ்சலூர் சசிக்குமார், சங்கத்தின் பொருளாளர் ஆர்.நிஷா ஜாஸ்மின், ஆண்டு வரவு-செலவு கணக்கை சமர்பித்தார். செயலாளர் எஸ்.எஸ்.தீபு வரவேற்று பேசினார். கேரள அரசு தலைமை செயலக ஊழியர் சங்க தலைவராக பி.ஹணி அவர்களும், பொதுச் செயலாளராக கே.என்.அசோக்குமார் அவர்களையும் மாநாடு தேர்வு செய்தது. பொருளாளராக ஆர்.நிஷா ஜாஸ்மின் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர்களாக சிந்து கோபன், பிரியமோல், நாசர் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.எஸ்.தீபு, நாஞ்சலூர் சசிக் குமார், கல்லுவிளை அஜித், குத்தனம் பலம், ஸ்ரீகுமார் ஆகியோர் துணைச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்ட னர். மேலும் செயற்குழு உறுப்பினர் களும், 360 பேர் கொண்ட மாநில கமிஷனும் மாநாட்டில் தேர்வு செய்யப் பட்டது. அக்.23 அன்று தலைமைச் செய லகத்திலிருந்து மாநாடு நடைபெறும் ஏ.கே.ஜி. அரங்கத்திற்கு ஊழியர்கள் ஊர்வலம் நடைபெற்றது. பொது மாநாட்டு நிகழ்வில் முதலமைச்சர் பினராயி விஜயன் சிறப்புரையாற்றி னார். ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.