மாநிலங்களையும் பிரதமரே ஆட்சி செய்வார்: கெஜ்ரிவால்
“தில்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான அவசர சட்டத்தின் மூலம் ஒன்றிய அரசு ஒரு சோதனை முயற்சியை மேற்கொள்ள இருக்கிறது. அது வெற்றி பெற்றால், பாஜக ஆளாத மாநிலங்களிலும் இதுபோன்ற அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து பட்டியலில் உள்ள மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தைப் பறிக்கும். ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளு நர்களின் மூலம் 33 மாநிலங்களிலும் பிரதமரே ஆட்சி செய்யும் நாள் வெகு தூரத்தில் இல்லை. எனவே, தில்லியின் நிர்வாக அதிகார மாற்றம் குறித்த அவசர சட்டத்தை மாநிலங்களவையில் தோற்கடிப்பதை முதல் விஷயமாக எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்” என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
‘ஒன்றிய அரசு துறைகளில் 30 லட்சம் காலியிடங்கள்’
பிரதமர் மோடியின் நடவடிக்கையால் ஒன்றிய அரசுத் துறைகளில் 30 லட்சம் காலி பணி யிடங்கள் உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். “2014-இல் 11.57 சதவிகிதமாக இருந்த காலிப் பணியிடங்கள் 2022-இல் 24.3 சதவிகிதமாக உயர்ந்து இரு மடங்காக அதிகரித்துள்ளது. மோடி அரசின் முடிவு தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு எதிரானது” என்றும் டுவிட்டரில் சாடியுள்ளார்.
‘ஜூன் 20-ஐ உலக துரோகிகள் தினமாகவே அறிவித்திடுக!’
ஜூன் 20-ஆம் தேதியை துரோகிகள் தினமாக அறிவிக்கக்கோரி ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸூக்கு, சிவசேனா (யு.பி.டி.) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கடிதம் எழுதியுள்ளார். “ஜூன் 20-ஆம் தேதியை உலக துரோகிகள் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் உங்களுக்கு எழுதுகிறேன். கடந்த ஆண்டு ஜூன் 20 அன்று பாஜக-வின் தூண்டுதலால் எங்கள் சிவசேனாவை சேர்ந்த 40 எம்எல்ஏ-க்கள் எங்கள் முதுகில் குத்தினர். எனவே, ஜூன் 21-ஆம் தேதியை உலக யோகா தினமாக கடைப்பிடிப்பது போல், ஜூன் 20-ஆம் தேதியை உலக துரோகிகள் தினமாக கடைப்பிடிக்க வேண்டும். துரோகிகளை உலகம் நினைவு கூரும் வகையில் இதை செய்ய வேண்டும்” என்று கடிதத்தில் ராவத் குறிப்பிட்டுள்ளார்.
கிரகஜோதி திட்ட சர்வரை முடக்க ஒன்றிய அரசு முயற்சி
“நாங்கள் ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்க முடிவு செய்துள்ளோம். அதை தடுக்கும் நோக்கத்தில் ஒன்றிய அரசு அரிசி ஒதுக்க மறுக்கிறது. பல்வேறு அரசு சேவைகளை வழங்குவதற்காக, கிரகஜோதி திட்டத்தில் சேவா சிந்து இணையதள பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இணைய பக்கத்தின் ‘சர்வா்’ விரைவாக செயல்படுவது இல்லை. இந்த சேவா சிந்து இணைய தள பக்கத்தையும் ஒன்றிய அரசு முடக்க முயற்சி செய்கிறது. ஆனால், எவ்வளவு முயற்சி மேற் கொண்டாலும், காங்கிரசின் உத்தரவாத திட்டங்களை நாங்கள் அமல்படுத்தியே தீருவோம்” என்று கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஸ் ஜர்கிகோலி கூறியுள்ளார்.
பஞ்சாப்பில் நிறைவேற்றப்பட்ட இரண்டு முக்கியமான மசோதாக்கள்
சண்டிகார், ஜூன் 21- மாநில அரசு பல்கலைக் கழகங்களில், மாநில ஆளுநருக்கு மாற்றாக மாநில முதல்வரே அந்தப் பதவியை வகிக்க வகை செய்யும், சட்டத் திருத்த மசோதா கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்க உள்ளிட்ட மாநிலங்களில் நிறைவேற்றப் பட்டு உள்ளது. இந்த வரிசையில் பஞ்சாப் சட்டப்பேரவையிலும்,‘தி பஞ்சாப் பல்க லைக்கழக சட்டங்கள் (திருத்த) மசோதா, 2023’ என்ற பெயரில் மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது. அதேபோல, ஆந்திரா, தெலுங் கானா வரிசையில், யுபிஎஸ்சி மூலமாக அல்லாமல், மாநில அரசின் வழிகாட்டுதல்படியே காவல்துறை தலைவரை (டிஜிபி) நியமிக்கவும் பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.
“திருநம்பி” என வாரிசு சான்றிதழ் வழங்க உத்தரவு
சென்னை, ஜூன் 21- பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவரின் பாலினத்தை “திருநம்பி” என குறிப்பிட்டு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னையை அடுத்த செம்மஞ் சேரியை சேர்ந்த மாறா என்பவர் தாக்கல் செய்த வழக்கில் தாம் தமிழ்நாடு சமூக நலத்துறையில் பதிவு செய்து திரு நம்பி என்றதற்கான அடையாள அட்டை பெற்றுள்ளதாகவும், தற்போது தம்மை திருநம்பி என குறிப்பிட்டு திருக்கழுக் குன்றம் வட்டாட்சியர் வாரிசு சான்று வழங்க மறுப்பதாகவும் தெரிவித்தி ருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவரின் பாலினத்தை “திருநம்பி” என குறிப்பிட்டு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள் ளார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அனு நிதா கலந்துகொண்டு வாதாடினார்.
5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, ஜூன் 21- தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. வடதமிழ்நாட்டின் பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, ஜூன் 25 வரை வடதமிழ்நாட்டில் ஒருசில இடங்க ளிலும், தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்க ளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கு... ஜூன் 25 வரை தென்தமிழ்நாட்டின் கட லோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடை யிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக் கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டா மென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.
டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 காலியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வலியுறுத்தல்
சென்னை,ஜூன் 21- டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 காலியிடங் களின் எண்ணிக்கையை 20 ஆயிர மாக உயர்த்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக் கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, ஏற்கெனவே அறிவிக் கப்பட்ட 10,117 என்பதிலிருந்து 10,748 ஆக உயர்த்த தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் முடிவு செய்தி ருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்டு 15 மாதங்கள் ஆகி விட்ட நிலையில் இந்த 15 மாதங் களில் மட்டும் சுமார் 15 ஆயிரம் பணி யிடங்கள் காலியாகியிருக்கக் கூடும். இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப ஆண்டுக்கு 50 ஆயிரம் 4ஆம் தொகுதி பணியாளர்கள் தேர்ந்தெடுக் கப்பட வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டித்தேர்வு களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படவுள்ள 4ஆம் தொகுதி பணியாளர் களின் எண்ணிக்கையை குறைந்த பட்சம் 20 ஆயிரமாக அதிகரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.