states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கெஜ்ரிவால் நம்பிக்கை

அகமதாபாத், செப்.3- குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதி மக்கள் பாஜக மீது கடும் கோபத்தில் உள்ள னர். சூரத்தில் ஆம் ஆத்மி  சார்பில் தேர்தல் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி னோம். கணக்கெடுப்பில் மொத்தமுள்ள 12 இடங்க ளில் ஆம் ஆத்மி 7 இடங்க ளில் வெற்றி பெறும் என  கணிக்கப்பட்டுள்ளது என  ராஜ்கோட்டில் ஆம் ஆத்மி  தலைவரும், தில்லி முதல்வ ருமான அரவிந்த் கெஜ்ரி வால் பேசினார்.

பே டிஎம் அலுவலகங்களில் சோதனை

புதுதில்லி, செப்.3- சட்டவிரோதமாக கடன் வழங்கல் மற்றும் சீன கடன்  செல்போன் செயலி விவ காரம் தொடர்பாக தில்லியில்  உள்ள பே டிஎம்(Paytm), ரஜோர்பே(Razorpay), கேஸ் பிரி (Cashfree) ஆன்லைன் பணப்பரிவர்த்  தனை நிறுவன அலுவலங்க ளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.  இதே விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநி லம் பெங்களுரூவில் அம லாக்கத்துறை சோதனை நடத்தியது.

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

திருவண்ணாமலை,செப்.3- திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப் பட்டிருந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இசுக்கழி காட்டேரி கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் திலீப் என்ற 12 வயது சிறுவன் கலந்து கொண்டார். அப்போது ஊர்வலம் நடந்துகொண்டிருக்கும் தருணத்தில் எதிர்பா ராத விதமாக திலீப் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் மயக்கம் அடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். 

மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு ஒதுக்குவதில் முன்னுரிமை

சென்னை,செப்.3- கடந்த சட்டமன்ற பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் வீடு வழங்க கோரியும், நகரங்களில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வழங்க கோரியும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என அத்துறைக்கான அமைச்சர் கீதாஜீவன் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் இரா. ஆனந்தகுமார் ஆக.8 ஆம் தேதி அரசாணை (எண்.24) வெளியிட்டுள்ளார். அதில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளின் மொத்த ஒதுக் கீட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றுத்திறனாளிகள் அணுகத்தக்க வகையில் தரைத்தள குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வரியம் மூலமாக வீடுகள் ஒதுக்கீடு செய்வதினை கண்காணிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்ஸிராணி, பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

நாடு முழுவதும் நெல் சாகுபடி பரப்பு 5.62 சதவிகிதம் அளவிற்கு குறைந்தது!

புதுதில்லி, செப்.3- நாடு முழுவதும் நெல் சாகுபடி பரப்பு, கடந்த ஆண்டை விட 5.62 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளது. இதேபோல பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் சாகுபடி பரப்பும் குறைந்துள் ளது. ஒன்றிய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுதொ டர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, சில மாநிலங்களில் பெய்யும் மழையின் காரணமாக இதுவரை நடந்து வரும் காரீப் பருவத்தில் நெல் சாகுபடி பரப்பு 5.62 சதவிகிதம்  குறைந்துள் ளது. கடந்த ஆண்டு இதே குறுவைப் பருவ காலத்தில் 406.89 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டி ருந்த நிலையில், நடப்பாண்டு அது 383.99 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.