விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன் யான் திட்டம் 2025-க்கு பதில் 2026-இல் செயல் படுத்தப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் அக்னூரில் பாதுகாப்புப் படை யினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக ராணுவம் தகவல் தெரிவித் துள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே திங்க ளன்று வேட்புமனு தாக்கல் செய்தார். கோப்ரி-பச்பகடி தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே போட்டியிடுகிறார்.
வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டது. வயநாடு மக்களவை தொகுதிக்கு நவ.13 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஊழியர் அஷ்ரப் கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ், பாஜக தொண்டர்கள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் தலசேரி செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.